Post Top Ad

திருகோணமலை - பறிபோகும் இதயபூமி

தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு பிரச்சினையின் பால் சர்வதேசத்தின் கவனத்தையும் கரிசனையையும் ஈர்த்ததில் திருகோணமலைக்கே முழுமையான பங்குண்டு. இந்து சமுத்திரத்தில் அரசுக்களின் ஆதிகத்தை நிலைநாட்ட, திருகோணமலை பிரதேசம் அரசுக்களினால் கையாளப்படக்கூடியதாகவோ அல்லது எதிரிகளின் ஆதிக்கத்தில் இல்லாதிருப்பதோ முக்கியமானது. ஏகாதிபத்திய அரசுக்களுக்கு, இராணுவ-பொருளாதார நலன்களின் பொருட்டு கேந்திர முக்கியமிக்க பிரதேசமாகவும், ஈழவர்களுக்கு தம் தேசிய குணாம்சத்தை வலுப்படுத்துவதில் இதய பிரதேசமாகவும் திருகோணமலை முக்கியத்துமிக்கமாகின்றது.  ஈழப்போராட்டத்தை பொறுத்தவரையில் திருக்கோணமலை மீதான ஆதிக்கமே போராட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகும்.

இதனையே ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணா “ஈழவர்களின் உடைமைப்பாட்டு போராட்டமானது திருகோணமலையை விடுவிடுப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது” என்று சுட்டிக்காட்டினார். மேலும் “அப்பிராந்தியத்தை தக்கவைத்துக்கொள்ளும் போதுதான் விடுதலைப்போராட்ட அமைப்பின் வலு நிர்ணயக்கப்படுகிறது” என்றும் வலியுறுத்தினார். விடுதலைப்போராட்ட அமைப்பின் வலுவை மாத்திரம் அல்ல விடுதலைப்போராட்டத்தையே நிர்ணயப்பதில் திருகோணமலை மீதான ஆதிக்கம் முக்கியமாகின்றது.

இதனை தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் உணர்ந்து கொண்டதோ இல்லையோ, சிறிலங்கா அரசு நன்கு உள்வாங்கியிருக்கின்றது. அதன் காரணமாகதான் தமிழ் பேசும் மக்களின் தேசிய குணாம்சத்தையும், உடைமைப்பாட்டு போராட்டத்தையும் சிதைக்கும் வகையில் திருகோணமலையில் ஈழவர்களி;ன் ஆதிக்கத்தை தகர்த்து, சிங்கள மேலாதிக்கத்தை ஏற்படுத்திவருகின்றது.

கடந்த வருடம் சிறிலங்காவின் ஒவ்வொரு மாவட்டத்தின் பெருமைகளையும் எடுத்துரைக்கும் விதத்தில் அரசால் 10ரூபாய் நாணய குற்றிகள் வெளியிடப்பட்டது. திருமலையின் சிறப்பு, ஆசியாவிலே பெரியதும் உலகில் ஐந்தாவது பெரியதுமான இயற்கை துறைமுகம் என்பதை உலகமே அறியும். ஆனால் சிறிலங்கா அரசு “இனபல்லினத்தும்” என்பதையே திருகோணமலையின் சிறப்பாக குறிப்பிட்டுள்ளது. குடியேற்றங்கள் மூலம் சிங்களவர்களின் சனத்தொகையை அதிகரித்து, அரச பயங்கரவாதம் மூலம் தமிழ் பேசும் மக்களை துரத்தியடித்து இனபல்லினத்துவம் நிலவுவதாக கூறுவது வெறும் வேடிக்கையானது மட்டுமல்ல. சேருவில விகாரையை பிராதனப்படுத்தி, திருமலையில் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டும் எண்ணத்தையே அரசு இங்கு குறிப்புணர்த்தியுள்ளது.

சிறிலங்கா அரசு, திருமலையில் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டிட, மிக நீண்டகாலமாக திட்டமிட்ட முறையில்  குடித்தொகை அமைவை மாற்றியமைத்து வருவதுடன், திருகோணமலையை வடகிழக்கு மாகாணங்களுடன் தொடர்பற்றதாக்கும் வகையில், வடமத்திய மாகாணத்துடன் இணைக்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. 

வரலாற்றில் நீண்டகாலமாக இத்தகைய முயற்சிகள் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் நடந்து வருவதை நாம் அறிவோம். முன்னர் போலவே, 2030 வரை சிறிலங்கா அரசின் அபிவிருத்தி கொள்கையை எடுத்துரைக்கும் தேசிய பௌதீக கட்டமைப்பு திட்டத்தின் ஊடாகவும் இந்த முயற்சிகளை தீவிரமாக்கியுள்ளது அரசு. ஏலவே இந்த திட்டம் குறித்தும், இத்திட்டம் ஊடாக மலையக, கிழக்கு பகுதிகளில் ஈழவர்களி;ன் தேசிய குணாம்சத்தை சிதைக்க தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பதிந்துள்ளேன். 2009 தமிழீழ போரின் முடிவிற்கு பின் அரசு ஈழவர்கள் இனியொருபோதும் தேசியகோரிக்கையை முன்வைக்காத வகையில் ஈழவர்களின் தேசிய குணாம்சங்களை சிதைத்து அழிக்கும் முயற்சியில் தீர்க்கமாக களமிறங்கியுள்ளது. இதன் போது திருக்கோணமலை மீது விசேட கவனம் செலுத்தியுள்ள சிறிலங்கா அரசு, தன் தேசிய பௌதீக கட்டமைப்பு திட்டத்தின் ஊடாக அதற்காக விசேட திட்டங்களையும் தீட்டியுள்ளது. திட்டங்களின் உள்நோக்கத்தின் தீவிரத்தை அவதானித்தால் சிறிலங்கா அரசு மீண்டும் பந்தை ஈழவர்களின் கைகளிற்கு கொடுப்பதற்கு தயாாில்லை என்பதும், அதற்காக ஈழவர்களின் கைகளை அறுத்தெறிய கங்கணம் கட்டியிருப்பதும் புலனாகின்றது.

இத்தகைய நோக்கம் கொண்ட தேசிய பௌதீக திட்டத்தில் திருகோணமலை மாவட்டம் கண்துடைப்பாக கிழக்கு பிராந்திய அபிவிருத்தி திட்டத்தில் குறித்து காட்டப்பட்டிருந்தாலும், திருகோணமலை மாவட்டத்தின் முழு அபிவிருத்தி திட்டங்களும் வடமத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, வடமத்திய பிராந்திய அபிவிருத்தி திட்டத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. 
கண்துடைப்பு


திருகோணமலையை வடமத்திய மாகாணத்துடன் இணைப்பது, அல்லது பொலநறுவை மாவட்டத்தின் சிலபகுதிகளையும், தம்புள்ளை பிரதேசத்தையும் திருகோணமலையுடன் இணைத்து புதிய மாகாண அலகு ஒன்றை ஏற்படுத்துவது என்பது சிறிலங்கா அரசின் நீண்டநாள் கனவாகும். இவ்வாறு திருகோணமலையை வடமத்திய பிராந்தியத்துடன் கவனத்திலெடுத்து அபிவித்தி வலயத்தை உருவாக்கியமையே அரசின் கபட எண்ணத்திற்கு சிறந்த சாட்சி. மேலும், கிழக்கு பிராந்திய அபிவிருத்தி திட்ட வரைப்படத்திலும் திருமலையை வெறுமனே காட்டி ஏமாற்று தனத்தையும் செய்துள்ளது அரசு.

இத்திட்டத்தில் 50 இலட்சம் சனத்தொகையை குடியமர்த்தும் வகையில் வடமத்திய பாரிய நகரம் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வடமத்திய பாரிய நகரம் தம்புள்ளை, பொலநறுவை, அனுராதபுரம், திருகோணமலை நகரங்களை இணைத்த பாரிய பிராந்தியமாகும்.
மேலும் 10 இலட்சம் சனத்தொகையை குடியமர்த்தும் வகையில் கிழக்கு தலைநகரம் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்ததமானி அறிவித்தலிருந்து


இங்கு வடமத்திய பாரிய பிராந்தியத்தில் 50 இலட்சம் மக்களை குடியமர்த்துவது தொடர்பாக குறிப்பிடப்பட்டு;ள்ளது. எனவே இந்த திட்டத்தினுள் 50 இலட்சம் மக்கள் உள்ளக்கப்படபோகின்றார்கள். ஆனால் பிறிதொரு இடத்தில் இந்த அளவு முறையே பொலநறுவை 5 இலட்சம், அனுராதபுரம் 15 இலட்சம், தம்புள்ள 10 இலட்சம், திருகோணமலை 10 இலட்சம் என மொத்தம் 40 இலட்சம் பேர் இலக்கு வைக்கப்படுவார்கள் என்றும், திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மக்கள் இலக்கு வைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வா்தமானி அறிவித்தலிலிருந்து
எனவே இங்கு திருகோணமலை பிரதேசம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதும், அப்பிரதேசத்தில் கொழும்;பு நகர் போன்று கைத்தொழில் அபிவிருத்தியை ஏற்படுத்தி 2030 ஆம் ஆண்டளவில் 20 இலட்சம் மக்கள் வசிக்கும் பொருளாதார முக்கியதுமிக்க பிரதேசமாக்கிடும் திட்டத்தை அனுமானிக்கலாம்.
வடமத்திய பாாிய பிராந்திய திட்டத்தின் விளக்கப்படம்


இத்திட்டத்தினை கூர்ந்து அவதானித்தால் திருகோணமலையானது கிழக்கு, வடக்கு பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வடமத்திய மாகாணத்துடன் பொருளாதார உறவுகள் அடிப்படையில் இறுக்கமான இணைக்கப்படும் வகையில போக்குவரத்து, வர்த்தக, தகவல் வலையமைப்பு உருவாக்கபடவிருப்பதை உய்தறியலாம். 

மேலும் அனுராதபுரம், தம்புள்ளை, பொலநறுவை, சேருவில என தொடராக புனித நகர் வலையமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்டவுள்ளது. இதற்கான முயற்சிகள் நீண்டகாலத்திற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டன. சேருவலவில் பௌத்த கட்டுமானங்களை ஏற்படுத்துவதும், வரலாற்று கதைகளை கட்டவிழ்த்து விடுவதும் இனி செய்ய எஞ்சியிருப்பதாகும். பொதுபலசேனா உட்பட பல பௌத்த அமைப்புக்கள் மகாவலிகங்கையின் இருமருங்கிலும் அமைந்த 2000 ஏக்கர் காணியை இசுலாம் மதத்தை சேர்ந்த ஈழவர்களால் அறுக்கப்படும் மாடுகளை மீட்டு பாதுகாப்பாக வளர்ப்பதற்காக கோரி வருகின்றார்கள். பெரும்பாலும் அரச அதிகார உயர்மட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், வாய் மூல உறுதிமொழிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போதைய மாடறுப்புக்கு எதிரான பௌத்த அமைப்புகளின் கூக்குரல்களின் பின்னனியும் இதுவே.

20 இலட்சம் என இலக்கு வைக்கப்படும் போது தற்போது திருக்கோணமலையிலிருக்கும் சனத்தொகை 2030 இல் ஏழு இலட்சங்காக காணப்படும். மிகுதி பேர் நாட்டின் ஏனைய பகுதிகளிலி;ல் இருந்து குடியமர்த்தப்படுவார்கள். இதற்கு அமையவே திருகோணமலை அபிவிருத்தி திட்டம் என்ற விசேட திட்டம், 10000 வேலைவாய்ப்பை உருவாக்கும் சம்பூர் கைத்தொழில் வலயம் (இரத்து செய்யப்பட்டது) போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமலை அபிவிருத்தி திட்ட கருவையும் உள்ளடக்கி வெளியிடப்பட்ட தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டத்தின் வடமத்திய பிராந்திய அபிவிருத்தி திட்டம் மூலம் குறிப்பிடப்பட்டு;ள்ள விவசாய, கைத்தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் இந்த குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வரலாற்று சம்பங்கள் எமக்கு அறிவுறுத்தி நிற்கின்றது.

ஏலவே திருகோணமலையில் நிர்வாக சேவை பரீட்சை போன்றவற்றில் 90சதவீதம் வரையில் சிங்களவர்களே தெரிவாகின்றனர். இதுபோலவே சுற்றுவா தொழில், மீன்பிடி குடியேற்றம் என்பன மூலமும் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிக்கப்படுகின்றது. இந்த குடியேற்ற முறைகள் தொடர்பில் ஈழவர் மீதான குடித்தொகை சீர்குலைப்பு முறைகள் என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

2007 இன் கணக்கெடுப்பின் படி திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகை மூன்று இலட்சத்து முப்பத்தைந்தாயிரமாகவும், திருகோணமலை நகர சூழலின் சனத்தொகை தொண்ணூராயிரமாகவும் இருக்கி;ன்றது. இந்த எண்ணிக்கை 2030 இல் திருகோணமலையில் ஏழு இலட்சமாகவும், திருகோணமலை நகர சூழலின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பதாயிரமாகவும் இருக்கும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி 20 இலட்சம் சனத்தொகை என்ற இலக்கை அடையமுடிகிறதோ இல்லையோ… 2012 சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் முறையே இரண்டுஇலட்சத்து ஐம்பதினாயிரம் : ஒரு இலட்சம் என்றிருக்கும் ஈழவர்: சிங்களவர் குடித்தொகை அமைப்பை மாற்றியமைக்க முழு மூச்சியலான முயற்சிகள் நடைபெறும்.


திருக்கோணமலை மாவட்டத்தில் ஈழவர், சிங்களவர் சனத்தொகை அதிகரிப்பு நடந்த விதம்.
வருடம் ஈழவர் சிங்களவர்
1827
18908250
1881
20050935
1891
235431105
1901
253181203
1911
269331138
1921
314261501
1946
5701411606
1953
6613315296
1963
9522739925
1971
13167354744
1981
16817185503
2007
24482484766
2012
2489961011991



இந்த தரவுகள் திருமலையின் குடித்தொகை அமைவு எவ்வாறு மாற்றியமைக்கப் படவிருக்கின்றது என்பதை தெளிவாக கட்டியம் கூறுகின்றது. எனவே ஈழவர்களின் தேசிய அந்தஸ்த்தினதும் உமைப்பாட்டு போராட்டத்தினதும் எதிர்hகாலம் அரசின் இந்த கபட திட்டத்தை முறியடிப்பதிலும் திருகோணமலையில் ஈழவர்களின் அரசியல் பொருளாதார சமூக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதிலுமே தங்கியிருக்கின்றது. திருகோணமலையில் ஆதிக்கம் பறிபோகுமாயின் ஈழவர்களின் தேசிய அந்தஸ்தும் பறிபோகும்.  இந்த விடயம் ஈழவர்களை விட, சிறிலங்கா அரசின்  தத்துவ வழிநடத்துனர்களுக்கு நன்கு புாிந்திருக்கின்றமையும் அதனை செயற்படுத்தி வருகின்றமையும் மேலும் ஆபத்தானதாகும். இந்நிலைமையை தொடருமாயின் 2030 இல் திருகோணமலை பறிபோவதை நாம் வேடிக்கை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram