Post Top Ad

11:22 PM

தமிழ் புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா?

by , in


மலரும்  வள்ளுர் ஆண்டு  2044  உயர்வாகை வருட பிறப்பையும்   உழவர் திருநாளையும்  உலக  தமிழர்கள் கொண்டாடும்,  கொண்டாட வேண்டிய சம வேளையில் தமிழரின் இவ் தேசிய விழாவை ஒரு மத விழாவாக கொண்டாடும் கைங்கரியம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருகிறது. ஓருபக்கம் கலாசாரம் சீரழிகிறது என்று கொக்கரித்துக் கொண்டே மறுபுறம் மரபுகளுக்கு மரணச்சடங்கு நடத்திக் கொண்டிருக்கின்றோம். தமிழரின் இவ் தேசிய விழாவை இந்து மதத்தை பின்பற்றும் தமிழர்கள் இந்து மதத்துக்குரிய பொங்கல் 
1:08 PM

சூரியனின் உதவும் கரங்கள்

by , in

ஸ்ரீலங்காவின் முன்னனி தனியார்  வனொலி சேவையாகிய சூரியன் வானொலி  'உதவும் கரங்கள்" என்ற பெயரில் ஒரு சமூக நலன்புரி  சேவையை நடத்துகின்றன. ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் மனங்களை கொள்ளைக்கொண்ட வனொலியான சூரியன் அப்படி ஒரு சமூக அக்கறையை வெளிக்காட்டி அந்த ஆகாய சூரியன்  போல் பிரகாசிக்க ஆரம்பத்துள்ளது. சிறுவர்  இல்ல சிறார்களுக்கு நத்தார்  தினத்திலே அவர்களுக்கு தேவையான பொருட்களை தன் சொந்தங்களான நேயர்களிடமிருந்து சேகரித்து  பரிசளித்திருந்தது. எத்தனை பெரிய  மனித நேயம். 
1:13 AM

யார் தீட்டானவர்கள்

by , in
மனித இனத்திற்கு பயனுள்ள பல பொருட்களை கண்டுபிடித்தது பெண்கள் தான். விவசாயம்இ பானைகள் செய்தல்,கூடைகள் பின்னல் தொடக்கம் ஆடைகள் வரை பட்டியல் நீண்டு செல்கின்றன. மாதவிடாய் ஏற்பட்டு இரத்தபோக்கு வரும்போது அன்றைய ஆதிப்பெணகள்  காடுகளில் கிடைத்த பஞ்சு தோல் பொருட்களை பயன்படுத்தத் துவங்கிக் காலப்போக்கில் துணியைக் கண்டுபிடித்தனர் என்கிறது வரலாறு. விலக்கப்பட்ட ஆப்பிள் பழத்தை ஏவாள் சாப்பிட்ட பின் வெட்க உணர்வு தோன்றி ஆடைபிறந்தது எல்லாம் ஏழுமலை, ஏழுகடல், ஏழு மைல் தாண்டிய வடிகட்டிய பொய்கள். இரத்த போக்கு என்ற உயிரியல் நிகழ்வை ஒட்டி பிறந்த தேவைகளே ஆடைகளின் துணிகளின் கண்டுபிடிப்பு வரை மனித இனத்தை அழைத்து சென்றது. அதையும் கடந்து அந்த கண்டுபிடிப்பும் அந்த கண்டுபிடிப்பிற்கு காரணமான உயிரியியல் நிகழ்வும் பெண்களை ஆணாதிக்கம் என்ற சமூகசிறையிலே கலாசார கைவிலங்கால் கைதியாகும் நிலை வரையும் அழைத்து சென்றுள்ளது.
12:07 AM

மௌனம் களையும் உரையாடல்

by , in


உலகை மாற்ற மனிதர்கள் உலகோடு கொள்ளும் உறவே உரையாடல். நான் உலகை நேசிக்கவில்லையெனில், நான் வாழ்வை நேசிக்க முடியாது. நான் மக்களை நேசிக்கவில்லையெனில் நான் உரையாடலுக்கு செல்ல முடியாது. அதிகாரமும் ஆணவமும் நிலவுமிடத்தில் உரையாடல் நிகழாது. வெளிப்படை குணமின்றி வாழும் மனிதனிடத்தில், மாற்று கருத்து தரிவிப்போரை இகழும் மணமுடையோர் மத்தியில், தன் அறியாமையை பிறரிடம் திணிப்போரிடத்தில் உரையாடலுக்கு வாய்பிருக்காது. ஆனால் எதிர்காலத்தில் நம்பிக்கையும், மக்கள் மீது தளராத பற்றும் கொண்டவனால் உரையாடாமலிருக்கவும் முடியாது. உரையாடல் உலகத்தையும் மனிதர்களையும் நேசிக்கும் ஒரு முயற்சி. விடுதவைக்காக, உரிமைக்காக மௌன கலாசாரம் கலளயபட உரையாட வேண்டியிருக்கின்றது. உரையாட   ஒரு களம் வேண்டியிருக்கிறது.

Post Top Ad

My Instagram