Post Top Ad

10:07 PM

தன்னிச்சையான போராட்டமா? - தமிழக மாணவர்களின் போராட்டம் 05

by , in
தமிழக மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையானது, அரசியல் சார்பற்றது என்ற அடையாளப்படுத்தல்களுடன் நடத்தப்படுகின்றது. சிலர் அதனை நிருபிக்க கடுஞ்சிரத்தை எடுத்துக்கொள்வதையும் காணக்கூடியாதாக உள்ளது.  மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தில்  மூக்கை நுழைக்க வந்த எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும்  மாணவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் மாணவர்கள்தங்களின் கூட்டங்கள் போராட்டங்களில் அரசியல் பிரமுகர்களுக்கு உரையாற்ற இடம்
12:56 PM

மாணவர் போராட்டங்களின் இயல்பு - தமிழக மாணவர்களின் போராட்டம் 04

by , in
மாணவர்கள் வர்க்க பிரிவில் ஒரு நிலைக்குத்து கூறாவார்கள். முதலாளித்துவ பொருளாதார முறை சமூகத்தை தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், மத்தியதர வர்க்கம், முதலாளிவர்க்கம் என பிரமிட் முறையில் அடுக்கடுக்காக பிரித்து வைக்கும். இந்த பிரமிட் அடுக்குகளில் மாணவர்கள் சகல அடுக்குகளிலும் உள்ளடங்கும் நிலைக்குத்து கூறாவார்கள். மாணவர்களின் இவ் வர்க்க இயல்பின் காரணமாக புரட்சியின் பிரதான பிரிவாக மாணவர்கள் முன்நிறுத்தப்படுவதில்லை. மாணவர்கள் புரட்சிகர சக்திகள் தான் ஆனால், புரட்சியை நடத்தக் கூடியவர்கள் அல்ல.
12:35 PM

பொது பல சேனாவின் ஆதரவு தளம் எது?

by , in
பொதுபலசேனாவிற்கு நாட்டில் ஆதரவு அதிகமாக இருப்பது, கண்டியிலும் கொழும்பின் மகரகம மற்றும் ராஜகிரிய அதனை அண்டிய பகுதிகளில் ஆகும். கண்டியில் அவர்களுக்கு எஸ்.பி. திசாநாயக்க தடையாக இருக்கின்றார். காரணம், கண்டியில் கணிசமான முஸ்லிம்களின் ஆதரவு அவருக்குண்டு அதனை இழக்க விரும்ப மாட்டார் அவர்.
12:18 PM

கோத்தபாய பொதுபலசேனாவை ஆதரிக்கின்றாரா?

by , in
பொதுபலசேனாவிற்கு அரசாங்கம் மறைமுகமாக ஆதரவளித்து வருகின்றது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச காலி நகரில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தினை திறந்து வைத்து உரயாற்றினார். இந்த சம்பவம் பொதுபல சேனாவின் பின்னால் அரசாங்கம் இருப்பதினை உறுதிபடுத்தியதாக பலர் தெரிவித்தனர். இந்த திறப்பு விழாவில் உரையாற்றிய கோத்தபாய சில விடயங்களை பலாத்காரமாக சொல்லும் போது அது பலருக்கு பிரச்சினை ஆகின்றது என பொதுபல சேனாவின் செயற்பாடுகளை நியாயபடுத்தி உரையாற்றினார்.
11:39 PM

தடைகளைத் தாண்டித் தொடரும் போராட்டம் - தமிழக மாணவர்களின் போராட்டம் 03

by , in
ஜெனீவாக் கூட்டம் முடிந்த கையோடு கல்யாண வீட்டில் பந்தியை பதம்பார்த்து முடித்தவர்கள் போல் மாணவர் போராட்டமும் நீர்த்துப் போகும் என்று சிலர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் ஆருடம் கூறினார்கள். மனித உரிமைக் கூட்டம் முடிந்த பின் மாணவர்கள் வழமை போல் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த போது பலர் அதனை நம்பிவிட்டனர். ஆனால் மாணவர் போராட்டம் தொடருகின்றது.
12:36 AM

சீறிப்பாய வைத்த தீப்பொறி -தமிழக மாணவர்களின் போராட்டம் செல்வழியும் செயல்வழியும் - 02

by , in
1983 ம் ஆண்டு குட்டிமணி, தங்கத்துரை உட்பட 53 பேர் சிங்கள இராணுவத்தினால் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டதுடன் தொடர்ந்த தமிழினப் படுகொலை தமிழகத்தில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. அதன் பின் 30 வருடங்கள் கடந்த பிறகு தற்போது ஒரு எழுச்சியைத் தமிழகம் கண்டுள்ளது. உடனடிக் காரணம் சனல் 4 வெளியிட்ட பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான நிழற்படங்களும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டமும் தான் காரணம். லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்த உண்ணாநிலைப் போராட்டம் முழு தமிழகத்திற்கும் பரவிச் சென்றது.
7:37 AM

தமிழக மாணவர்களின் போராட்டம் செல்வழியும் செயல்வழியும் - 01

by , in
எதிர்பாராத நேரங்களில் தோன்றிடும் ஒரு சில தீப்பொறிகள் முழு உலகையும் உலுக்கிவிடும். யதார்த்தங்களையும் எதிர்வுகூறல்களையும் தலைகீழாக மாற்றிவிடும். மாற்றங்கள் எதிரானதாகவோ சார்பானதாகவோ அமையலாம், ஆனால் அவற்றின் பின்னால் எல்லாம் பலமான தத்துவ கோட்பாடு இருக்கும்.
10:34 PM

விஸ்வரூபம் வின்னர்களின் விளையாட்டு

by , in


முதலாளியத்திற்குள் சகலதிற்கும் விலை உண்டு. ஆனால் எதற்குமே மதிப்பில்லை. உணர்வுகள் கூட இங்கு காசிற்கு விற்கப்படுபவைதான். விலைபோகும் அளவிற்கே உணர்வுகள் இங்கு மதிப்பை பெறும். உழைக்கும் வர்க்கத்தின் கலையுணர்விற்கும் இதே நிலைதான். உழைக்கும் வர்க்கம் தன் உழைப்பால் உருவாக்கிய  ஒட்டுமொத்த கலைகளும் சினிமா என்ற  பொதிக்குள் அடக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பரபரப்பு கூட விற்பனைப் பண்டந்தான். இதன் காரணமாகத்தான் சினிமாத் துறையில் முதலீடு செய்யப்பட்டு பரபரப்பு உருவாக்கப்படுகின்றது. இப்படி பரபரப்பை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய திரைப் படங்களில் ஒன்றுதான் விஸ்வரூபம். விஸ்வரூபம் ஏற்படுத்திய பரபரப்பு பல பத்திரிகைகளிற்கு தீனி போட்டது. சில பத்திரிகைகள் வேண்டுமென்றே பரபரப்பாக்கின (அதிக பரபரப்பு அதிக இலாபத்தை தருமிங்கு) இப்படி பரபரப்பை ஏற்படுத்திய விஸ்வரூபம் திரைப் படத்தினைப் பற்றிய விமர்சனங்களைத் தனி நபர்களும் ஊடகங்களும் போட்டிபோட்டு எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். எமது நோக்கம் விஸ்வரூபம் திரைப் படத்தை விமர்சிப்பது அல்ல. இவ்வாறு விமர்சிப்பது எய்பவனுடன் மோதாமல் எய்யப்பட்ட பொருளுடன் மோதுவதற்கு சமனானதாகும். 
9:26 PM

தோழர் சமீர கொஸ்வத்தவின் மே நாள் உரை

by , in

'சமவுடமை வாழ்க்கை' என்பதே எமது மே தின தொனி பொருளாகும்.126 வருடங்களுக்கு முன் 8 மணித்தியாள வேலை நேரத்திற்காக போராடி இரத்தம் சிந்திய தொழிலாளர்களின் செங்குருதியினால் சிவப்பாகிய செங்கொடியை தாங்கி நாம் தொழிலாளர் நாளை கொண்டாடி கொண்டிருகின்றோம். அன்று 8 மணித்தியாள வேலை நேரத்திற்கு போராடிய தொழிலாளர்கள் இன்று 16 மணித்தியாளம் வேலை செய்ய தயாராய் இருக்கின்றார்கள். ஒரு மேலதிக கொடுப்பனவு வேலை நேரம் கோருகின்றனர்.

Post Top Ad

My Instagram