Post Top Ad

ஈழவரும் இசுலாமியரும்

இசுலாமியர்கள் அனைவரும் மத அனுட்டாங்களிலில் பழக்க வழக்கங்களில் வித்தியாசபடுவர்கள் ஒழிய இனத்தால் தமிழர்களே என்றும், இசுலாமியர்கள் அராபிய குடியேற்றவாசிகளின் ஆண்வழித்தோன்றல்கள் என்றும் இருமுனை விவாதங்கள் சில காலங்களாக நடந்துவருகின்றன. ஆனால் துரதிஸ்ட்டவசமாக எமக்கிருக்கும் சொற்பமான தொல்லியல் சான்றுகள் வரலாற்று குறிப்புக்களை கொண்டு இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த தீர்மானத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெறும் ஊகங்கள், புராணக்கதைகள், பகுத்தறிவை தாண்டும் நம்பிக்கைகள் மூலம் முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகள் அனுமானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த விவாவத்தில்  மூன்று வகையான   போக்குகளை   காணலாம். முதலாவதாக இலங்கை இசுலாமியர்கள் மதமாறிய தமிழர்களே என்ற வாதமும். இரண்டாவதாக இலங்கை இசுலாமியர்கள் அராபிய வர்த்தகர்களின் ஆண்வழித்தோன்றல்கள் என்ற வாதமும், மூன்றாவதாக சிங்களவர்களும் தமிழர்களும் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வந்தேறு குடிகள், இலங்கை முஸ்லிம்களே இந்த தீவின் பூர்வீககுடிகள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதங்கள் இலங்கை இசுலாமியர்களின் பூர்வீகத்தை எடுத்தியம்பி இசுலாமியர்களின் உடமைபாட்டு போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கிலன்றி வெவ்வேறு தரப்பினரின் சுய இலாபங்களுக்காகவும் தனிப்பட்ட  அரசியல் வர்க்க நலன்களிற்காகவுமே பெரும்பாலும் முன் வைக்கப்படுகின்றன. இதன் ஆரம்பமே சட்டசபை கதிரையில் தான் இடம்பெறுகின்றது. இசுலாமியர்களுக்கு சட்ட சபையில் ஒர் உறுப்பினர் வழங்கப்படஆயத்தங்கள் இடம்பெற்ற வேளையில் யாழ் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  சேர். பொன். இராமநாதன்   இசுலாமியர்கள் தமிழர்களின் அங்கமே என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த போக்கிற்கு எதிராக இசுலாமியர்கள் அராபிய வர்த்தகர்களின் ஆண் வழித்தோன்றல்கள் என்ற வாதம்இசுலாமியர்களின் ஆதிக்க வர்க்கத்தினரால் முன்வைக்கப்பட்டது. உண்மையில் இந்த வாதம் இசுலாமிய உழைக்கும் மக்களின் சார்பில் அவர்களின் நலன்களிற்காக முன்வைக்கப்பட்டதன்று. வர்த்தக நோக்கத்திற்காக வந்த வம்சாவழியினரும் அவர்கள் அடிவருடிகளினாலும் தங்கள் நலன்களிற்காக முன்வைக்கப்பட்டதாகும். அதனை விடசோனகர் என்று அழைக்கப்படும் இசுலாமியர்களே இந்த தீவின் பூர்வீககுடிகள்  ஏனையோர் வந்தேறு குடிகள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தை முன் வைப்பவர்களின் நோக்கமாக இருப்பது இசுலாம் மதத்தை முதன்மைப்  படுத்தி மத பாரம்பரிய  பிரியத்தை நிலை நாட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. 

இசுலாமியர்களை தமிழர்களின் அங்கம் என்று கூறி அவர்களை தமது  ஆதிக்கத்தை வலுபடுத்தி கொள்ள முயல்பவர்களினாலும்,வர்த்தக நோக்கங்களிற்காக இந்நாட்டிற்கு வந்து இலங்கை இசுலாமியர்களிடத்தில் தன் பண பலத்தாலும் அதனால் விளைந்த சமூக அந்தஸ்த்தாலும் ஆதிக்கம் செலுத்திவரும் வம்சாவழி இசுலாமியர்களும் அவர்களது அடிவருடிகளும் தங்கள் நலன்களிற்காக இலங்கை இசுலாமியர்களை அராபிய ஆண்களின் வழி தோன்றலாக்கிடும் எத்தணிப்புக்களாலும், ஏனையவர்களை வந்தேறு குடிகளாக்கி இசுலாமியர்களை பூர்வீக குடிகளாக்கி தமது மத ஆதிக்க பாரம்பரிய பிரியத்தை நிறைவேற்ற துடிக்கும் முயற்சிகளினாலும் இலங்கை இசுலாமியர்களின் பூர்வீகம்  மறக்கடிக்கப்பட்டும், அவர்கள் உடமைபாட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாத வகையில் முடக்கப்பட்டும் இன்னலிற்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். 

இசுலாமியர்களின் பூர்வீகம் குறித்து சிறு தொகையினரான ஆதிக்கம் செலுத்தும் வம்சாவழி முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளின் பார்வையில் ஆராயாமல் பெரும்பான்மையான  உழைக்கும் சாதாரண மக்களின் பார்வையில் ஆராய வேண்டும். அதன் மூலமே பூர்வீகம் குறித்த சரியான நிலைப்பாட்டிற்கு வரமுடியுமாக இருப்பதுடன், அதனடிப்படையில் தமது உடமைபாட்டு போராட்டத்தையும் இலங்கை இசுலாமியர்களால் முன்னெடுக்க முடியும். மேற்குறித்த மூன்று போக்கிலான விவாதங்களில் ஒரு முடிவிற்கு வர முடியும். அதாவது இலங்கை இசுலாமியர் இந்த தீவின் பூர்வீக குடிகளினர்களின் பகுதியினர் ஆவர். அராபிய மற்றும் ஏனைய முஸ்லிம் வர்த்தகர்களால் இசுலாம் மதம் அறிமுகமாகிய போது அம்மார்க்கத்தை தழுவியவர்களே இலங்கை இசுலாமியர்கள் ஆவர். அதனை போல் பௌத்தம் மற்றும் இந்து மதத்தை தழுவியவர்களும் இருந்தமை நிருபிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த இடத்தில் தனி சிங்களவர்களிற்கு  மத்தியில் வாழும் இசுலாமியர்கள் தமிழ் பேசுவது குறித்தும் சிங்களவர்கள் இசுலாம் மதத்தை தழுவாமை குறித்தும் கேள்வி எழும். நிலபிரபுத்துவ முறையுடன் இறுக்கமாக பிணைந்திருந்து சிங்களவர்கள் இசுலாம் மதத்தை தளுவ மறுத்தமையும் பௌத்த மதத்திற்கு அரச அணுசரனை கிடைத்தமையும் காரணமாக அமைய கூடியவை ஆகும். இதே நிலைமையை தமிழ் பேசியவர்கள் தரப்பிலும் காணலாம். தமிழ் தரப்பில் இறுக்கமான நிலபிரபுத்து முறை நிலவா விட்டாலும் தென்னிந்திய செல்வாக்கு மற்றும் இந்த பிரதேசங்களில் ஆதிக்கம் மிக்க தமிழ் அரசுகள் இருந்தமையும் அதன் அணுசரனை இந்து மதத்திற்கு கிடைத்தமையும் வடகிழக்கு மற்றும் ஏனைய பகுதி தமிழ் பேசிய மக்கள் மத்தியில் அல்லது தமிழின் ஆதி வடிவத்தை பேசிய மக்கள் மத்தியில் இசுலாம் பரவுவதில் செல்வாக்கு செலுத்தியிருக்க வேண்டும். இதனை பறை சாற்றும் வகையில் தமிழ் அரசுக்களின் ஆதிக்கம் இருந்த பிரதேசங்களை தவிர்த்து கிழக்கிலும் மன்னாரிலும் இசுலாமியர்கள்  பெரும் எண்ணிக்கையிலும் ஏனைய பகுதிகளில் அநேகமாக முழுமையாகவும் பரம்பல் அடைந்திருப்பது அமைகிறது. 

அத்துடன் ஒரு சமூகம் தன்னை அடையாளப்படுத்தும் வகையிலேயே பிற சமூகங்கள் அந்த சமூகத்தை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் இலங்கை இசுலாமிய சமூகத்தை பொறுத்தவரை வெவ்வேறு முரண்பட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்படுகிறது. அத்துடன் இசுலாமிய உழைக்கும் வர்க்கம் தங்களை உடைமைபாட்டு அடிப்படையில் அடையாளப்படுத்தவில்லை. இதற்கு காரணமாக இந்து ஆதிக்க பிரிவினரால் தூற்றப்பட்டமையும் அதனால் பூர்வீக குடிகளான இசுலாமியர்கள் அவர்களின் பூர்வீக உடமைப்பாட்டு அடிப்படையில் அடையாளப்படுத்துவதை புறந்தள்ளி வந்திருப்பதும் காரணமாகலாம்.அதற்கேற்றாற் போல் இந்து ஆதிக்க பிரிவினரால் இசுலாமியர்கள் இழிவான முறையில் அடையாளப்படுத்தப் பட்டமையும் அந்த குரோதம் இன்று வரை தொடர்வதும் அமைகிறது. இந்த குரோதத்தை தமக்கு சாதகமாக்கி, இலங்கை இசுலாமியர்கள் அராபிய வர்த்தகர்களின் ஆண்வழித்தோன்றல்களே என கதைபரப்பி, அவ்வாறு வேறுபடுத்துவதற்கான பண்பாடு கூறுகளை உருவாக்கும் முயற்சியில் வம்சாவழி இசுலாமியர்கள் பிரயத்தனம் கொண்டதோடு இலங்கை இசுலாமியர்களின் தலைமையையும் கையகபடுத்தியுள்ளனர். இவர்களின் இந்த செயல் இலங்கை இசுலாமியர்களை பெரும் இன்னல்களிற்கு தள்ளியுள்ளதுடன் அரசவை கதிரைகளில்  சகலதையும் எல்லை படுத்தி விட்டது. மறுபுறம் தமிழ் தலைவர்கள் என அடையாளப்படுத்தும்   இந்துக்களால்   இசுலாமிய சமூகத்தின் மீதான காழ்புணர்ச்சியும் வெளிபடுத்தப்பட்டு எல்லா பக்கமும்  இசுலாமியர்களை நெருக்கியுள்ளது. இந்ததலைவர்கள் தங்கள் சமூகத்தின் ஏனையவகுப்புக்கள் மீதும் இதே போன்ற காழ்புணர்வை வெளிபடுத்தியுள்ளனர். 

எனவே இசுலாமியர்கள் ஈழவர்களின் அங்கம் அல்ல. அவர்கள் தொல்குடிஈழவர்களே. இசுலாமியர்கள் அங்கம் என்றால், இந்துக்களும் அங்கமே. அதாவது இசுலாமியர்களை நோகடித்து புறகணித்த ஈழம் என்ற உடமைப்பாடு உண்மையானதன்று. அது வெறுமனே உள்ளீடற்ற பொருள் ஆகும். ஈழவர்களின் பூர்வீக குடிகளின் ஒரு பகுதியினரான இசுலாமியர்களின் எழுச்சியின்றிய ஈழவர்களின் எழுச்சி முழுமையானதன்று. ஈழவர்களின் விடுதலை போராட்டத்தில் இசுலாமியர்கள் பிரிக்கமுடியாதவர்களும்,தவிர்க்க முடியாதவர்களும் ஆவர். இசுலாமியர்கள் விலகி நிற்கவேண்டியவர்களும் அல்ல. இசுலாமியர்களும் ஏனைய மதத்தை சேர்ந்த தமிழர்களும் மதம் சாரா தமிழர்களும் மொழிவாரி அடிப்படையில் ஈழவராய் இணைந்து மொழிவாரி உடைமைப்பாட்டிற்காக முன்னெடுக் கும் போராட்டமும் எழுச்சியுமே முழுமை ஆனதாகும்!

ஈழவராய் இணைவோம் ! இடர்தீர போராடுவோம் !

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram