Post Top Ad

பரப்பியல் கட்டமைப்பை விளங்கப்படுத்துவதில் புவியியலாளர்களின் பங்களிப்பு

வினா-07/15: பிராந்தியங்களின் பரப்பியல் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில் புவியியலாளர்கள் நல்கியுள்ள பங்களிப்பைப் பற்றி கலந்துரையாடுக.

அறிமுகம்
பரப்பியல் கட்டமைப்பு எனப்படுவது பௌதீக மற்றும் மனித புலப்பாடுகள் புவியியல் வெளியில் ஒழுங்கமைந்துள்ள விதத்தினை குறிக்கின்றது. பிராந்தியங்கள் பற்றிய பகுப்பாய்வினை செய்வதற்கு பரப்பியல் கட்டமைப்புகளை புரிந்துக் கொள்ள வேண்டியது மிக அத்தியாவசியமாதாகும். இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள பரப்பியல் கட்டமைகளை விளங்கப்படுத்துவதற்காக ஆரம்பகாலம் தொட்டே புவியியலாளர்கள் கோட்பாட்டு ரீதியாகவும், பிரயோக ரீதியாகவும் காத்திரமான பங்களிப்பை நல்கி வந்துள்ளார்கள். இப்பங்களிப்புக்கள் பிராந்தியங்கள் பற்றிய பகுப்பாய்விலும், புவியியலின் விடயப்பரப்பிலும் பரிணமான வளர்ச்சியை ஏற்பட காரணமாக அமைந்திருக்கின்றன.

பரப்பியல் கட்டமைப்பின் வகைப்பாடும் புரிந்துக் கொள்வதற்கான அணுகுமுறைகளும்
புவியியலாளர்களின் பங்களிப்பை ஆராயும் போது, பரப்பியல் கட்டமைப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ள மற்றும்; புரிந்துக் கொள்ளப்பட்ட விதத்தின் பின்னணியில் ஆராய்வது முக்கியமானதாகும். புவியலாளர்கள் பரப்பியல் கட்டமைப்புகளை ஆராய பல்வேறுப்பட்ட அணுகுமுறைகளை கைக்கொண்டு வந்திருக்கின்றார்கள். இவ் அணுகுமுறைகளை ஆரம்பகால அல்லது புராதான பிராந்திய புவியியல் அணுகுமுறை, பரப்பியல் விஞ்ஞான மற்றும் அளவுசார் வழிமுறை, நடத்தைவாத மற்றும் மனிததேய புவியியல் கண்ணோட்டம், மார்க்சிய மற்றும் விமர்சன கண்ணோட்டம், பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார அணுகுமுறை, புவியியல் தகவல் முறைமை போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்திய அணுகுமுறை என வரிசைப்படுத்தி ஆராயலாம்.

ஆரம்பகால புவியியலாளர்கள் பௌதீக மற்றும் மானிட பண்புகளை கொண்டு பிராந்தியங்களை விவரிப்பதில் முதன்மையான கவனத்தை செலுத்தினார்கள். இடங்கள் கொண்டுள்ள தனித்துவமான அடையாளங்களை புரிந்துக் கொள்வதே இவர்களின் நோக்கமாக இருந்தது. இதன் பின்னராக புவியியலில் ஏற்பட்ட அளவுசார் புரட்சியின் விளைவாக புள்ளிவிபரவியல் மற்றும் மாதிரி (அழனநட) நுட்பங்களை உள்வாங்கி பரப்பியல் கட்டமைப்புக்கள் பற்றிய துல்லியமான பகுப்பாய்வும், கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நேர்மாறாக நடத்தைவாத மற்றும் மனிதநேய புவியியலாளர்கள் நடைமுறை அனுபவங்கள் மற்றும் மனித - சூழல் இடைத்தொடர்புகளிலும் கவனம் செலுத்தி பரப்பியல் கட்டமைப்புகளை விளங்கப்படுத்த முற்பட்டார்கள். இதனை தொடர்ந்து புவியியலில் ஏற்பட்ட விமர்சன அணுகுமுறை, குறிப்பாக மார்க்சிய கண்ணோட்டம், பரப்பியல் கட்டமைப்புக்கள் ஆதிக்கம், முதலாளித்துவம், சமத்துவின்மை போன்ற அரசியல் காரணிகளினால் வடிவமைக்கப்படுகின்றது எனும் பார்வையை முன்வைத்தார்கள். பின் வந்த , பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார புவியியலாளர்கள் இடங்கள், பிராந்தியங்கள், சுற்றுச் சூழல் போன்ற வெளிகள் சமூக ரீதியாக கட்டமைக்கப்படுவதையும், வெவ்வேறு மக்கள் குழுக்கள் ஒரே வெளியை கூட வெவ்வேறாக புரிந்துக் கொள்வதினையும் விளங்கப்படுத்தி விமர்சன அணுகுமுறையாளர்களின் கண்ணோட்டத்தை வலுப்படுத்தினார்கள். சமகாலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணடாக புவியிலாளர்களால் சிக்கலான பரப்பியல் உறவுகளை நிகழ் நேரத்தில் காட்சி வடிவில் நோக்கி பகுப்பாய்வு செய்வது மூலம் பரப்பியல் கட்டமைப்புகளை விளங்கப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள்.

ஆரம்பக்கால பங்களிப்புகள்

ஆரம்பகால புவியியலாளர்கள் பிராந்தியங்களின் பரப்பியல் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை அமைத்து பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். இவர்கள் இடங்கள் பற்றிய முழுமையான ஆய்வை நடத்தினார்கள்.

எடுத்துக்காட்டாக, விடல் டி லாபிளாச், காலவோட்டத்தில் இயற்கையாக அபிவிருத்தி அடைந்த சிறிய பிராந்தியங்கள், மனிதர்களுக்கும் பௌதீக சூழலுக்கும் இடையேயான இடைத்தொடர்பினால் தோன்றியதை என்பதை விளங்கப்படுத்தும் ‘ஊழnஉநிவ ழக Pயல’ எண்ணக்கருவை முன்வைத்தார். இவர் புவியியலை மனிதர்களுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பை புரிந்துக் கொள்ள அவசியமானதாக இருக்கும், இடங்கள் பற்றிய விஞ்ஞானமாக நோக்கினார்.

இதனை போலவே, ரிச்சர்ட் ஹார்ட்ஷோர்ன் தனது கோரோலோஜி – ஊhழசழடழபல அணுகுமுறை மூலம் பிராந்தியங்களின் தனித்துவம் பற்றி புரிந்து கொள்வதற்கு அப்பிராந்தியத்தின் மானிட புவியியல் மற்றும் பௌதீக புவியியல் ஆகிய இரண்டின் அம்சங்களையும் இணைத்து கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இவ் ஆரம்பக்கால மரபு தற்கால நவீன பிராந்திய திட்டமிடலிலும் செல்வாக்கு செலுத்தும், நில அமைப்பு, காலநிலை, கலாச்சாரம், காணி பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான பிராந்திய வகைப்படுத்தலுக்கான அடித்தளத்தை இட்டது.

அளவுசார் புரட்சிக் மற்றும் பரப்பியல் விஞ்ஞான எழுச்சி கால பங்களிப்புகள்.
1950 மற்றும் 1960களில் ஏற்பட்ட அளவுசார் புரட்சியின் விளைவாக ஆய்வு நெறிமுறைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. வால்டர் கிறிஸ்டாலர் போன்ற புவியியலாளர்கள் பிரதேசம் ஒன்றில் குடியேற்றங்களின் பரம்பல் அமைந்திருக்கும் விதத்தினை விளக்க மாதிரிகளை உருவாக்கினார்கள். அவரின் மைய இடக் கோட்பாட்டு – ஊநவெசசயட pடயஉந வுhநழசல – பொருட்களும் சேவைகளும் விநியோகம் செய்யப்படும் திறனின் அடிப்படையில் குடியிருப்புக்கள் அறுகோன அமைப்பு வடிவத்தில் ஒழுங்கமைக்க பட்டுள்ளன என முன்மொழிந்தது. இதன் அடிப்படையில் பெரிய நகரங்கள் அதிகளவான பொருட்களையும் சேவைகளையும் வழங்க கூடியதாகவும், அதனை சூழ அமையும் சிறய நகரங்கள் குறைந்த அளவிலான பொருட்கள் சேவைகளை வழங்குவதாகவும் படிநிலை அமைப்பை கொண்டிருக்கின்றன. இது நகரங்களின் படிநிலை அமைப்பு முறையை விளக்கியது.

இதனை போலவே ஈர்ப்பு மாதிரி – புசயஎவைல அழனநடள - மற்றும் வலையமைப்பு பகுப்பாய்வு – நேவறழசம யயெடலளளை- ஆகியன புவியியலாளர்களுக்கு வர்த்தகம், இடப்பெயர்வு, நாளாந்த பயண முறைகள் போனடற பரப்பியல் இடைத்தொடர்புகளை அளவிட உதவியது. இம்மாதிரிகள் பரப்பியல் கட்டமைப்புக்கள் உள்ளுர், பிராந்திய மற்றும் பூகோள பரிமானங்களில் எத்தகைய தொழிற்பாட்டை கொண்டுள்ளன என்பதை புரிந்துக் கொள்ள உதவியதோடு, அவை நகர போக்குவரத்து திட்டமிடலில் முக்கிய பங்கை வகிப்பதாகவும் மாறியது.

நடத்தை மற்றும் மனிதநேய புவியியல் கால பங்களிப்புகள்
பரப்பியல் விஞ்ஞானம் புற பௌதீக விடயங்கள் மற்றும் அளவுசார் பகுப்பாய்வுகளிலேயே அதிக கவனம் குவித்திருந்தமையால் மட்டுப்பாடுகளை கொண்டிருந்தது. இதற்கு எதிர்வினையாக மனிதநேய புவியியலாளர்கள் இடங்கள் அல்லது வெளிகள் தொடர்பில் மனிதர்கள் கொண்டிருக்கு உணர்வுகள், அனுபவங்கள் போன்ற அகவிடயங்களையும் கருத்திலெடுத்து ஆராயும் அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார்கள்.

இவற்றில் டோர்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண் முன்வைத்த கால - புவியியல் மாதிரி முக்கியமானதாகும். இம்மாதிரி மனிதர்களின் நாளாந்த நடவடிக்கைகள் காலம் மற்றும் இடம் அல்லது வெளி என்பவற்றால் மட்டுப்படுத்தப் படுத்தப் படுகின்றது அல்லது வடிவமைக்கப் படுகின்றது என்பதை விளக்கியது. இம்மாதிரி , ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்க இயலாத உயிரியல் ரீதியான மட்டுபாடுகள் (திறன் மட்டுபாடுகள்), வேலை நேரம், கூட்டத்தில் பங்கெடுக்கும் அவசியம் போன்ற இணை சேர வேண்டிய தேவைகள் (இணைப்பு மட்டுபாடுகள்), சில இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப் படாமை போன்ற சமூக விதிமுறைகள் - சட்டங்கள் (அதிகார மட்டுப்பாடுகள்) ஆகிய மூன்று வகையான மட்டுபாடுகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பரப்பியல் கட்டமைப்புகளால் வடிவமைக்கப்படும் காலம், இடம் சார்ந்த மட்டுப்பாடுகளுடனனே மனிதர்கள் தமது வாழ்வில் இடங்களை கண்டறிகிறார்கள் என்ற புரிதல் ஏற்பட்டது.

மேலும், மனிதர்கள் இடங்களை எவ்வாறு உணர்கின்றார்கள் என்பது பற்றிய மனப்படிவ – அநவெயட அயி ஆய்வுகளும், மனிதர்களின் கலாச்சாரம், ஞாபகங்கள், அடையாளம் ஆகியன அவர்கள் இடங்களை உணரும் விதத்தில் செல்வாக்கு செலுத்துவதை எடுத்துக்காட்டின.

இவ் அணுகுமுறைகள் இடம் எனப்படுவது வெறும் புவியல் அமைப்புகள் மாத்திரமல்ல, அவை மனிதர்களின் அனுவங்களாலும், சமூக காரணிகளாலும் உருவாகுபவை என்பதை வலியுறுத்தின. இது பரப்பியல் கட்டமைப்புகள் பற்றி புரிதலில்; புதிய பரிமாணங்களை ஏற்படுத்தியது.

மார்க்சிய மற்றும் விமர்சன புவியியல்
மார்க்சிய மற்றும் விமர்சன புவியியலாளர்கள் அரசியலும், பொருளாதாரமும் இடங்கள் ஒழுங்கமைக்கப்படும் விதத்தை ஆராய்ந்தார்கள். டேவி ஹார்வி போன்ற சிந்தனையாளர்கள், முதலாளித்துவ முறைமையில் இடங்கள் இலாப நோக்கில் வடிவமைக்கப்படுவதையும், அதன் காரணமாக சில பிராந்தியங்கள் வளர்ச்சி அடைவதையும் சில இடங்கள் பின் தங்கி இருப்பதையும் எடுத்துக்காட்டினார்கள். ;ளுழயவயைட கiஒ, வெளிகளை சரிசெய்தல்’ எண்ணக்கரு, பொருளாதார நடவடிக்கைகள் இலாபமீட்டும் இடங்களை நோக்கி நகர்வதையும்,‘கையகப்படுத்தி ஒன்றுசேர்த்தல்’ யஉஉரஅரடயவழைn டில னiளிழளளநளளழைn எண்ணக்கரு அதிகாரம் அற்ற சமூகங்கள் தமது நிலங்களையும், வளங்களையும் இழந்து வருவதையும் விளங்கப்படுத்தின. இவ் அணுகுமுறைகள் நியாயமற்ற முறைகளை அம்பலப்படுத்தி, சமூகநீதிக்காகவும், நீதியான கொள்கைகளுக்காகவும் போராடும் வழிமுறைகளை முன்மொழிந்தன.

பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார கண்ணோட்டங்களின் பங்களிப்பு
பின்நவீனத்துவ மற்றும் கலாச்சார புவியியலாளர்கள் பரப்பியல் கட்டமைப்புகளை நெகிழ்வு தன்மையுடனும், பல்பரிமான பார்வையுடனும் அணுகினார்கள். டோரின் மாஸி பிராந்தியங்கள் தனித்தனியானவையோ நிலையானவையோ அல்ல, அவை உலகளாவிய ரீதியிலான வலையமைப்பில் இணைக்கப்பட்ட பகுதிகள் ஆகும் என்பதை வலியுறுத்தினார். மேலும், கலாச்சார புவியியலாளர்கள் இடங்கள் பற்றிய பார்வையும், அனுபவங்களும் பாலினம், இனம், வர்க்கம், போன்ற காரணங்களால் மாற்றத்திற்குள்ளாவதை எடுத்துக் காட்டினார்கள். இக்கண்ணோட்டம் புவியியலாளர்களுக்கு இடங்களின் மாறும் மற்றும் சிக்கல் தன்மையை புரிந்துக் கொள்ள உதவியது.

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்: GIS மற்றும் தொலை உணர்தல் தொழில்நுட்பம்

அண்மைக்கால கணினி சார் தொழில்நுட்பங்களின் வரவானது, பரப்பியல் பகுப்பாய்வுகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் எழுச்சி இடஞ்சார்ந்த பகுப்பாய்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. புவியியல் தகவல் முறைமையானது (GIS) புவியியலாளர்களுக்கு சிறந்த விளக்கத்தை தரும் வகையில் சுற்றுச்சூழல், மக்கள்தொகை, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு வகையான தரவுகளை ஒரே வரைப்படத்தில் உள்ளடக்கி ஆராயயும் வாய்ப்பை தந்துள்ளது.

தொலைவு உணர் தொழில்நுட்பமானது நிகழ்நேர செய்மதி படங்கள் மூலம், நில பயன்பாடு, காடழிப்பு, நகர்ப்புற வளர்ச்சி, பேரழிவு தாக்கம் போன்றவற்றை கண்காணிக்கின்றது. இத் தொழில் நுட்பங்கள் பாரம்பரிய புவியியல் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வகையில் துல்லியமான தரவுகளை வழங்குவது மூலம், பிராந்திய திட்டமிடல், சுற்றுச்சூழல் மேலாண்மை, கொள்கை வகுப்பாக்கம் போன்றவற்றில் இன்றியமையாததாகிவிட்டன,

முடிவுரை
நாம் புவியியல் கட்டமைப்புகளை புரிந்துக் கொள்ளும் பொருட்டு, புவியியலாளர்கள் பரந்தளவிளாலனதும் பல்வகைப்பட்டதுமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். இப்பங்களிப்புக்கள் தொடர்ச்சியாக பரினாம வளர்ச்சியை கண்டு வருகின்றது. புவியியலாளர்களின் பங்களிப்புகள் இப் பங்களிப்புகள், பிராந்திய அடையாளத்தை முதன்மை படுத்திய ஆரம்பகால காலகட்டத்திலிருந்து, சமகால தொழில்நுட்ப யுகம் வரையிலும் இடங்களின் வேறுப்பாடுகளை விளக்கி, வினைத்திறனான திட்டமிடல்களை மேற்கொள்ளவற்கு துணைபுரிந்து வருகின்றன. சமகால வேகமான நகரமயமாக்கல், காலநிலை மாற்றங்கள், மற்றும் பூகோள மயமாதல் சூழல்களில் பரப்பியல் கட்டமைப்புகள் பற்றிய புவியியல் அறிவானது முன்னெப்போதையும் அதிக தேவையுள்ளதாக மாறி இருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram