Post Top Ad

மருத்துவ ஆதிக்கம்

கேள்வி 10: மருத்துவ ஆதிக்கத்தை வரையறுத்து, மருத்துவர்-நோயாளர் உறவுகளையும், சுகாதார அமைப்புகளையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை ஆராய்க.



அறிமுகம்
மருத்துவ ஆதிக்கம் எனப்படுவது சுகாதார பராமரிப்பு சேவையின் அமைப்பு வியூகம், வழங்கல் முறை, அதன் உள்ளடக்கம் என்பவற்றில் மருத்துவ தொழில் கொண்டிருக்கும் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் விபரிக்கும் சமூகவியல் கோட்பாடாகும். எலியட் ஃப்ரீட்சன என்ற சமூகவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கோட்பாடு நோய் நிலைகளைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் கொண்டுள்ள கட்டுப்பாட்டுடன், ஏனைய சுகாதார தொழில்முறையாளர்கள் மற்றும் சுகாதார தெற்காசியா உட்படப் பல நாடுகளில் மருத்துவர்கள் உயர்ந்த சமூக கௌரவம், தமது சுகாதார நிறுவன கட்டமைப்பினுள் அதிகாரம், மருத்துவ அறிவு தொடர்பில் ஏகபோக உரிமை என்பவற்றை அனுபவிக்கின்றனர். இவ் ஏகபோக உரிமைகள் தொழில்முறையின் உயர் தரத்தையும், அறிவியல் உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்த துணைப்புரியும் அதேவேளை அதிகார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தல், நோயாளர்களின் சுயாதீன தன்மையை மட்டுப்படுத்தல், மருத்துவர் - நோயாளர் கூட்டு ஒத்துழைப்பில் தடைகள் என்பவற்றுக்கும் காரணமாகின்றது. இப்பத்தியானது மருத்துவ ஆதிக்கத்தின் இயல்பையும், மருத்துவர் - நோயாளர் உறவு மற்றும் சுகாதார பராமரிப்பு சேவையில் அதன் தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் ஆராய்கிறது.

மருத்துவ ஆதிக்கத்தின் வரையறையும் சிறப்பம்சங்களும்
மருத்துவ ஆதிக்கம் என்பது சமூகத்தில் மருத்துவத் தொழிலில் கட்டமைப்பு மற்றும் கலாச்சார ஆதிக்கத்தைக் குறிக்கிறது. எலியட் ஃப்ரீட்சனின் கூற்றுப்படி, மருத்துவ ஆதிக்கமானது மருத்துவர்கள் அவர்களும், சுகாதாரத்துறை சார்ந்த ஏனைய ஏனைய தொழில்முறையாளர்களதும் வேலைகள் மீதும், சுகாதார முறைமையின் விதிகள் மற்றும் கட்டமைப்பின் மீதும் கட்டுப்பாடுகளை நிலைநாட்டுவதின் வாயிலாகப் பிறக்கின்றது.

மருத்துவ ஆதிக்கத்தின் முக்கிய அம்சங்கள்
• மருத்துவ அறிவு மற்றும் முடிவெடுப்பதில் ஏகபோக உரிமை
• மருத்துவத் தொழிலுக்கான சட்டப் பாதுகாப்பும் அரசு ஆதரவும்
•பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருத்தலும் தொழில்முறை தன்னாட்சியும்
•சுகாதாரக் கொள்கைகள், கல்வி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மீதான செல்வாக்கு

சாராம்சத்தில், மருத்துவர்கள் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் நிபுணர்கள் மட்டுமல்ல - அவர்கள் நோய் என்று கருதப்படுவது, அது எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அந்த பராமரிப்பை வழங்க யார் தகுதியானவர்கள் என்பதற்கான வாயில் காவலர்கள்.

மருத்துவர் - நோயாளர் உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கம்
மருத்துவர்களும் நோயாளர்களும் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மருத்துவ ஆதிக்கம் மிகவும் வலுவான வகையில் வடிவமைக்கிறது. அவற்றினை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
• உறவு முறை படிநிலை கொண்டதாக அமைதல்.
மருத்துவ ஆதிக்கம் காரணமாக மருத்துவர் - நோயாளர் உறவு முறையில் வைத்தியர்கள் சர்வ அதிகாரம் கொண்டவர்களாகப் பார்க்கப்படுகின்றார்கள். நோயாளர்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை எவ்வித கேள்வியுமின்றி பின்பற்ற வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றார்கள். இப்போக்கானது மருத்துவர்களும் - நோயாளர்களும் சுகாதார விடயங்களில் நோயாளர்களை வலுவூட்டி கூட்டாக முடிவெடுப்பதை மட்டுப்படுத்துகின்றது.

• நோயாளரின் கருத்துக்கான இடம் மட்டுப்படுத்தப்படுதல்
மருத்துவ ஆதிக்கம் காரணமாக நோயாளர்கள் தமது மனவுணர்வுகளையும் கலாச்சார மற்றும் சமூக ரீதியான விடயங்களையும் வெளிப்படுத்துவதற்கு உகந்த சூழல் இல்லாது காணப்படலாம். மேலும், வாழ்வியல் சூழல் அனுபவங்களை விட, மருத்துவ ரீதியான அறிகுறிகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படுகின்றது. இதன் காரணமாக மருத்துவர் - நோயாளர் உறவில் நோயாளரின் கருத்துகளும், நிலைகளும் வெளிப்படுத்தப்படுவது மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும்.

• கலாச்சார உணர்வுகள் புறக்கணிக்கப்படுகின்றமை
இலங்கை போன்ற பல் கலாச்சார சமூகங்களில் நோயாளர்களால் ஆழமாக மதிக்கப்படும் பாரம்பரியமான நோய் சிகிச்சை முறைகளும், ஆன்மீக நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. மருத்துவ ஆதிக்கமானது இவற்றினை புறக்கணிப்பதற்கு வழிகோலுகின்றது.

• நோயாளர்கள் மருத்துவரைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படல்
மருத்துவ ஆதிக்கம் காரணமாக, நோயாளர்கள் பெரும்பாலும் சுகாதார ரீதியான விடயங்களில் முடிவெடுக்கும் போது மருத்துவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாக தமது சுய பராமரிப்பு தொடர்பிலும், சமூக மைய பராமரிப்பு தகவல்கள் தொடர்பாகவும் நம்பிக்கையின்மை ஏற்படலாம். 

உதாரணமாக, இலங்கையில், பெரும்பாலும் நோயாளர்கள் நோயறிதல் செயன்முறையை புரிந்து கொள்ளாமலோ அல்லது சிகிச்சை முறைகள் தொடர்பில் கேள்வி கேட்காமலோ மருத்துவர் கொடுக்கும் மருந்துச் சீட்டுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சில நேரங்களில் நோயாளர்கள் அவசரகதியில் நடத்தப்பட்டாலோh, அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்ந்தாலோ தமக்கிருக்கும் முழு அறிகுறிகளையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

சுகாதார முறைமைகளில் ஏற்படுத்தும் தாக்கம்
மருத்துவ ஆதிக்கம் மருத்துவர் - நோயாளர் இடைத்தொடர்புகனை மாத்திரமல்லாது, சுகாதார சேவை கட்டமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு ஏற்படுத்தும் தாக்கத்தினை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
• சுகாதாரத் துறையின் பிற தொழில்முறையாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதல்
தாதியர்கள், மருத்துவச்சிகள், சுகாதாரத்துறை துணை பணியாளர்கள் போன்ற சக சுகாதாரத்துறை தொழில்முறையாளர்களின் பங்களிப்பு சுகாதார சேவைகளை நடாத்திச் செல்வதில் அத்தியாவசியமானதாக இருந்த போதிலும், அவர்கள் துறை சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் மருத்துவர்களின் ஆதிக்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. அவர்களின் நிலை மருத்துவர்களுக்குக் கீழ்நிலையில் உள்ளதாகவே இருந்து வருகின்றது.

• ஏனைய தொழில்முறையாளர்களின் பணி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல்
மருத்துவ ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்காக மருத்துவ உதவியாளர்கள், தாதியர் பயிற்சியாளர்கள், சமூக சுகாதார ஊழியர்களுள் போன்றோர்களுக்கான பயிற்சியின் பரப்பெல்லையை விரிவுபடுத்தும் கொள்கைகளை மருத்துவர்களின் சங்கங்கள் எதிர்க்கின்றன.

• கொள்கை வகுப்பாக்கங்களில் செல்வாக்கு செலுத்துதல்
மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் சுகாதாரக் கொள்கை வகுப்பாக்கக் குழுக்களில் பதவிகளை வகிக்கிறார்கள். இதன் காரணமாகச் சுகாதார கொள்கைகளில் மருத்துவமனை சார்ந்த நோய் குணப்படுத்தல் விடயங்களுக்கு அதிக முன்னுரிமையும், வளங்களும் ஓதுக்கப்படுவதுடன், சமுதாயத்தை மையப்படுத்திய நோய்த்தடுப்பு முன்னெடுப்புகளுக்கு அதிக கவனமும், முக்கியத்துவமும் கொடுப்பது தவிர்க்கப்படுகின்றது,

• பாரம்பரியமான மருத்துவ முறைகள் ஓரங்கட்டப்படல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் கூட, அவை பிரதான அரங்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டு நவீன அலோபதி மருத்துவ முறையே அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. மருத்துவ ஆதிக்கத்தின் இதில் முக்கியமான பங்கு வகிக்கின்றது.

எடுத்துக்காட்டு:
இந்தியாவில், இந்திய மருத்துவ சங்கமானது ஆயுஸ் மருத்துவர்கள் எனப்படும் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவமுறை மருத்துவர்கள் தற்கால மருந்துகளை தமது நோயாளர்களுக்கு வழங்குவதை எதிர்கின்றார்கள். இது மருத்துவத்தின் தரத்தைக் குறைத்து விடுவதாக வாதிடும் அவர்கள், சுகாதார வசதிகள் குறைந்த அளவில் காணப்படும் பின்தங்கிய பிரதேசங்களில் கூட இந்நடைமுறையை அனுமதிக்க மறுக்கின்றார்கள்.

மருத்துவ ஆதிக்கத்தின் மீதான விமர்சனங்கள்
சமூகவியல் கண்ணோட்டத்தில், மருத்துவ ஆதிக்கம் மீது நேர்மறையான விமர்சனங்களும், எதிர் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றினை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

நேர்மறை விமர்சனங்கள்
தரநிர்யனம், பொறுப்புக்கூறல், விஞ்ஞான ரீதியான தகவல்களின் அடிப்படையிலான சிகிச்சைகள் என்பவற்றை உறுதிப்படுத்துகின்றது.

நோயாளர்களைப் போலிகள் மற்றும் தவறான மருத்துவ தகவல்களிலிருந்து பாதுகாக்கின்றது

தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கிறது

எதிர்மறை விமர்சனங்கள்
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் அதிகாரப் படிநிலைகளை ஏற்படுத்துகிறது
சுகாதார சேவையின் வெவ்வேறு துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மட்டுப்படுத்துகின்றது

சாதாரண வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் (எ.கா., பிரசவம், மாதவிடாய் நிறுத்தம்) மருத்துவ மயமாக்குவதை ஊக்குவிக்கிறது

நோய்களின் போது நோயாளர் எதிர்கொள்ளும் அனுபவங்கள், பாரம்பரிய ரீதியான அறிவு , நோய்த் தடுப்பு என்பவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

சமகால போக்குகளும்; எதிர்கால செல்நெறியும்
சுகாதாரப் பராமரிப்பு சேவையில் ஏற்பட்டுவரும் நவீனக்கால மாற்றங்களால் மருத்துவ ஆதிக்கம் சவால் சவாலுக்குப்படுத்தப்பட்டு வருகின்றது.
• நோயாளர் நேய சுகாதார பாரமரிப்பு சேவை மற்றும் நோயாளர்க்குத் தகவல் வழங்கி சம்மதம் பெறல் போன்ற போக்குகளின் வளர்ச்சி
• தாதியர்கள்யர்கள், மருத்துவச்சிகள், சமூக சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைத்து வருதல்
• சமூக காரணிகளையும் கருத்திலெடுக்கும்; ஒருங்கிணைந்த பொதுச் சுகாதார அணுகுமுறைகளின் முன்னெடுப்பு
• தேசிய சுகாதார கொள்கை திட்டங்களில் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்தல்

முடிவுரை
நவீன சுகாதாரப் பராமரிப்பு சேவைகளில் அதிகாரத்தின் இயங்கியலைப் புரிந்துகொள்வதற்குத் துணைபுரியும் முக்கியமானதொரு கோட்பாட்டு விளக்கமாக மருத்துவ ஆதிக்கம் காணப்படுகின்றது. மருத்துவ ஆதிக்கமானது சுகாதார பராமரிப்பு சேவையில் தொழில்முறைமயாக்கம், அறிவியல் வளர்ச்சி என்பவற்றினூடாக பாதுகாப்பு தன்மையையும், தரத்தையும் மேம்படுத்தும் அதே வேளை கூட்டாண்மை செயற்பாடுகள், நோயாளர்களை வலுவூட்டி முடிவெடுப்பதில் பங்கெடுக்கச் செய்தல், சுகாதாரத் துறை தொழில்முறையாளர்களிடையான சமத்துவம் என்பவற்றில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. சுகாதார பராமரிப்பு சேவைகளுக்கான கேள்வியும், அவசியமும் அதிகரித்துச் செல்லும் சமகாலத்தில், மக்கள் நேயமிக்கதும், சுகாதாரத் துறையின் பிரிவுகளுக்கிடையேயான கூட்டாண்மை உடையதும், எதனையும் ஓரங்கட்டாததும் புறக்கணிக்காததுமான நியாயமானதும், சமநிலைப் படுத்தப்பட்டதுமான மருத்துவ அதிகார கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானதாகும். அவ்வகையில் மருத்துவ ஆதிக்கத்தைச் சரிசெய்வது, மருத்துவர்களை குறை மதிப்புக்கு உள்ளாக்குவதாக அன்றி, அனைத்து சுகாதார செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒவ்வொரு நோயாளர்களையும் மதிப்பு மிக்கவர்களாக்கும் செயன்முறையாக அமையும்.






No comments:

Post a Comment

Post Top Ad

My Instagram