கேள்வி 11: மருத்துவ மயமாக்கல் என்றால் என்ன என்பதைக் கூறி, சமூகப் பிரச்சினைகள் எவ்வாறு மருத்துவப் பிரச்சினைகளாக மாற்றப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகள் மூலமாகக் கலந்துரையாடவும்.
அறிமுகம்
மருத்துவ மயமாக்கல் எனப்படுவது, அடிப்படையில் மருத்துவ பிரச்சினைகளாக அமையாத பிரச்சினைகளை, மருத்துவம் சார் பிரச்சினைகளாகப் புரிந்துக் கொள்தல், வரையறுத்துக் கூறுதல், சிகிச்சை அளித்தல் மூலமாக மருத்துவ பிரச்சினைகளாக அணுகும் செயன்முறையை குறித்து நிற்கும் மருத்துவ சமூகவியல் கருத்தாக்கமாகும் (concept). இக்கருத்தாக்கம் நாளாந்த வாழ்வில் சாமான்ய விடயங்களாகக் கருதப்பட்ட அல்லது சமூக, கலாச்சார வாழ்வியலில் முறைகளுடாகவோ, அல்லது தார்மீக நெறிமுறைகள் மூலமாகவோ கையாளப்பட்டு வந்த விடயங்களை மருத்துவ பிரச்சினையாக்கி, அவற்றின் மீது மருத்துவத் துறையின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதை விவரிக்கின்றது. மருத்துவ மயமாக்கல் செயன் முறையானது, தற்கால நவீன சமூகங்களில் அதிகார கட்டமைப்புக்கள், சமூக நெறிமுறைகள் மற்றும் கலாச்சார மாற்றங்களில் எவ்வாறான தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதினை இர்விங் சோலா, இவான் இல்லிச் மற்றும் பீட்டர் கான்ராட் போன்ற சமூகவியலாளர்கள் தமது ஆய்வுகள் மூலமாக எடுத்துக்காட்டி உள்ளார்கள். குறிப்பாக உயிர் மருத்துவத்தின் வளர்ச்சியும், செல்வாக்கும் காரணமாகப் பிரசவம், முதுமையடைதல், மனவழுத்தம் போன்ற வழக்கமான வாழ்க்கை நிகழ்வுகள் இன்று மருத்துவ ரீதியாக அணுகப் படவேண்டிய மருத்துவ பிரச்சினைகளாக்கப்பட்டுள்ளன. இப்பத்தியானது மருத்தவமயமாக்கலையும் அதன் விளைவுகள் மற்றும் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகளுடன் ஆராய்கின்றது.
மருத்துவ மயமாக்கலின் வரையறையும் முக்கிய அம்சங்களும்
மருத்துவ மயமாக்கல் என்பது இயற்கையான மனித வாழ்வியல் நிலைமைகளை அல்லது சமூகப் பிரச்சினைகளை மருத்துவ ரீதியாக அடையாளம் கண்டறிந்து, சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நிலைமைகளாக மாற்றும் செயன்முறைகள் ஆகும். குறிக்கிறது.
மருத்துவ மயமாக்கலானது மருத்தவ நிபுணர்களும், மருத்துவ முறைமைகளும் சமூக பிரச்சினைகளில் தமது ஆதிக்கத்தினை பரப்புதல், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தமது வியாபார நோக்கத்திற்காக புதிய புதிய விடயங்களைச் சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையாக பிரச்சார படுத்தல், ஊடகங்கள் வழக்கமான விடயங்களை உயிர் மருத்துவ கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தி வருதல், அரசாங்கங்களும் காப்புறுதி நிறுவனங்களும் பிரச்சினைகளை மருத்துவ ரீதியானதாக வகைப்படுத்திக் கூறுவதற்கு ஊக்கப்படுத்துகின்றமை போன்ற பல காரணங்களால் ஏற்பட்டு வருகின்றது.
மருத்துவ மயமாக்கலின் முக்கிய அம்சங்கள்
வழக்கமான வாழ்வியல் அனுபவங்களை விபரிக்க மருத்துவ சொற்களைப் பயன்படுத்துதல்
சாமன்ய வாழ்வில் ஏற்படக்கூடிய வழக்கமான, இயல்பான நிகழ்வுகள், மாற்றங்களை மருத்துவ கலைச்சொற்களைக் கொண்டு அழைப்பது மருதத்துவமயமாக்கல் செயன்முறையில் அவதானிக்கக் கூடிய அம்சமாகும். உதாரணமாக, தயக்கம் சுபாவம் கொண்ட அல்லது அதிகமான உணர்வுவயப்படக் கூடிய நபர்களை, ‘சமூக பதற்ற கோளாறு’ உடையவர்கள் அல்லது ‘மனநிலை கோளாறு’ உடையவர்கள் என அழைப்பதைக் குறிப்பிடலாம். அதாவது, மனிதர்களில் ஏற்படக்கூடிய சமான்யமான மாற்றங்களாக அடையாளப்படுத்தப்பட்ட விடயங்கள், 'நோய் அறிகுறிகள் - ளுலசெழஅந’ , ‘கோளாறு - னுளைழசனநச, ‘செயலிழப்பு - னுலளகரnஉவழைn’ போன்ற சொற்களால் விபரிக்கப்படுதல் பொதுவழக்காக மாறியிருக்கும்.
நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ செயல்முறைகளில் அதிக கவனம் செலுத்தப்படல்
உடல், மனம் சார்ந்த நிலைமைகளை அல்லது மாற்றங்களை நோய் நிலை என அடையாளப்படுத்துவதிலும், மருந்து வழங்குதல், சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளைப் பரிந்துரைப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படுவதினை மருத்துவ மயமாக்கலில் காணலாம். இதன் காரணமாக சமூக மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உளவியல் சார் நடவடிக்கைகள் மூலமாகத் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட மருத்துவ பிரச்சினைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, அதிகப்படியான நோய் கண்டறிதல் நடவடிக்கைகள், தேவையற்ற மருந்து பாவனை மற்றும் சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுதல் போன்றவற்றை மருத்துவ மயமாக்கலில் காணலாம்.
மருத்துவ மயமாக்கலிற்கான எடுத்துக்காட்டுகள்
1. பிரசவம்
பாரம்பரிய ரீதியாகவே சமூக அல்லது குடும்ப நிகழ்வாகக் காணப்பட்ட பிரசவம், தற்போது முழுமையாக மருத்துவ மயமாக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலம் முழுவதும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து வழங்கல் மயமாகியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாக நடத்தப்படுகின்றது. நிலையான ஸ்கேனிங் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன, தெற்காசியா பிராந்தியங்களில் அவசியமற்ற நிலையில் கூட, அறுவை சிகிச்சை மூலமான பிறப்புக்கள் தற்காலத்தில் பொதுவான நடைமுறையாகி உள்ளது.
உதாரணம்: இலங்கை மற்றும் இந்தியாவில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில், வருவாய் நோக்கம், வைத்தியர்களின் பரிந்துரை மற்றும் பிரசவம் குறித்த பிரச்சாரங்கள் காரணமாக, அறுவை சிகிச்சை மூலமான பிரசவத்தைத் தேர்ந்தெடுப்பது 40 சதவீதத்தையும் அதிகரித்த வகையில் காணப்படுகின்றது.
2. மனநல பிரச்சினைகள்
சோகம், பதற்றம், மன அழுத்தம் போன்ற மன உணர்வுகள் தற்காலத்தில் மனநலன் சார்ந்த கோளாறுகளாக இனம்காணப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் இயல்பானவையாகவோ அல்லது கரிசனைக்குரிய வகையில் கடுமையானதாகவோ காணப்படலாம். எனினும், இவை அதிகப்படியாக மருத்துவ பிரச்சினையாக முத்திரைகுத்தப்படுவதன் காரணமாக, இவற்றுக்குக் காரணமாக அமையும் வேலையின்மை, குடும்ப பிணக்குகள் போன்ற சமூக காரணிகள் கருத்திலெடுக்கபடாத நிலைமை ஏற்படுகின்றது.
உதாரணமாக இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில், பல்கலைக்கழக மாணவர்கள் முகங்கொடுக்கும் பரீட்சை காரணமான மனவழுத்தம் அல்லது காதல் உறவு முறிவுகள் போன்ற பிரச்சினைகளுக்கு சமூக ரீதியாக அல்லது உளவியல் ரீதியான தீர்வுகள் வழங்கப்படாமல், மனவழுத்தத்தை சரிசெய்யும் மருந்துகள் தீர்வாக நடைமுறைப்படுத்தப் படுகின்றமையைக் குறிப்பிடலாம்.
3. மாதவிடாய் நிறுத்தமும் வயோதிபமும்
இயற்கையாகவே நடக்கும் வாழ்வியல் மாற்றங்களான மாதவிடாய் நிறுத்தமும், முதுமையடைதலும் சரிசெய்யப்பட வேண்டிய ஹோர்மோன் பிரச்சினை அல்லது உடல்ரீதியான பிரச்சினையாகக் கட்டமைக்கப் படுகின்றது.
உதாரணமாக, பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு ஹார்மோன் பிரதீயீடு செய்யும் சிகிச்சை (ர்ழசஅழநெ சநிடயஉநஅநவெ வாநசயில - ர்சுவு) மேற்கொள்ளவும், வயதடையும் நபர்கள் “வயதடைதலை தாமதப்படுத்தும்” சிகிச்சைகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இதன் காரணமாக இவ் மாற்றங்களை எதிர்கொள்ள வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்தும், சமூக ரீதியான வலுவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலிருந்தும் மக்கள் திசைதிருப்பப் படுகின்றார்கள்.
4. யுவவநவெழைn னுநகiஉவை ர்லிநசயஉவiஎவைல னுளைழசனநச (யுனுர்னு) – அவதானக் குறை மிகையியக்க கோளாறு
தற்காலத்தில் குழந்தைகள் அவதானக்குறைவாக இருக்கின்றமை அல்லது அளவுக்கு மீறிய இயங்குதன்மையை வெளிக்காட்டல் அவதானக் குறை மிகையியக்க கோளாறாக இனங்காணப்பட்டு, மருத்துவச் சிகிச்சைகள் பரிந்துரைக்கப் படுவது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளில் குழந்தைகள் கற்றல் செயல்பாடுகளில் மந்த தன்மையை வெளிக்காட்டும் போது அல்லது அளவுக்கு அதிகமாகச் சேட்டைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கும் போது, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துதல், வாழ்வியல் முறை மாற்றம் போன்ற வழிமுறைகளைக் கையாள்வதற்குப் பதிலாக மருத்துவச் சிகிச்சை பெற அறிவுறுத்தப் படுகின்றார்கள்.
மருத்துவ மயமாக்கலுக்கான காரணங்கள்
மருத்துவ அதிகாரத்தின் விரிவாக்கம்:
ஒரு நபர் இயல்பான நிலையில் இருக்கின்றாரா, அல்லது நோய் நிலைக்கு ஆளாகியுள்ளாரா என்பதைத் தீர்மானிப்பதில் மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் வகிக்கும் பங்கும், செலுத்து வரும் அதிகாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவர்கள் கொண்டிருக்கும் இத்தகைய அதிகாரம் காரணமாக சாமான்ய வாழ்வியல் அனுபவங்களைக் கூட மருத்துவ பிரச்சினையாக அடையாளப்படுத்தும் வாய்ப்பை அதிக அதிகமாகப் பெற்று மருத்துவ மயமாக்கலுக்கு வழிகோலுகின்றார்கள்.
மருந்து உற்பத்தி நிறுவனங்களின் செல்வாக்கு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக இலாபமீட்டும் நோக்கில், சகலவற்றுக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்த முயல்கின்றார்கள். இதன்பொருட்டு சாதாரணமாக மனிதர்களில் ஏற்படக் கூடிய மாறுதல்களைக் கூட நோய்களாக அடையாளப்படுத்தி தாம் உற்பத்தி செய்யும் மருந்துகளை நுகர வேண்டிய நிர்ப்பந்தங்களை வலிந்து உருவாக்கின்றார்கள். இதன் காரணமாக மருந்து பாவனை அதிகரிக்கின்றது.
விஞ்ஞானம் மற்றும் மருந்துகளில் கொண்டுள்ள நம்பிக்கை
தற்கால மக்கள் பாரம்பரிய ரீதியான அல்லது சமூக ரீதியான புரிதல்களை விட, மருத்துவ விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் மிது அதிக நம்பிக்கை கொள்கின்றனர். எனவே, மருத்துவம் சாராத பிரச்சினைகளுக்குக் கூட மருத்துவர்கள் மற்றும்; மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவது அதிகரித்து வருகின்றது. உதாரணமாகத் தமிழ்ச் சமூகத்தில் பாரம்பரிய சடங்காக இடம்பெற்று வந்த குழந்தைகளுக்குக் காதணி அணிவிக்கும் நிகழ்வு, இன்று வைத்தியர்களின் ஆலோசனையுடன் மருத்துவ மனைகளில் நிகழ்த்தப்படும் விடயமாகி உள்ளமையைக் குறிப்பிடலாம்.
ஊடக மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
பொதுச் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள் விழிப்புணர்வையும், சுகாதார நிலைமைகளையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டாலும், சில சமயங்களில் சாதாரண அனுபவங்களையும் மருத்துவ பிரச்சினைகளாகப் பார்க்க வைத்து விடுகின்றது. உதாரணமாக, மனநலன் மேம்பாடு சார்ந்த பிரச்சாரங்கள் அவசியமானது எனினும், அதிகப்படியாக கவனமெடுத்தல் காரணமாக அனைத்து விதமான சோக உணர்வுகளும், பதற்றங்களும் மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டியவையாகக் கருதப்படுவது நடக்கின்றமையை குறிப்பிடலாம். மேலும், ஊடக பிரச்சாரங்களும் அனைத்துக்கும் மருத்துவச் சிகிச்சை பெறுவதே தீர்வு என்பதை ஊக்குவித்து வருகின்றது.
சுகாதார காப்புறுதி கொள்கைகளும் திட்டங்களும்
அநேகமான காப்புறுதி திட்டங்கள் மருத்துவச் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயங்களுக்கே வழங்கப்படுகின்றன. எனவே, மிகச் சிறியதான பிரச்சினைகளுக்குக் கூட முறைப்படியான மருத்துவச் சிகிச்சைகளை நாடி செல்ல மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இவ்வகையான காப்புறுதி கொள்கைகள் காப்புறுதி நலன்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தனிப்பட்ட அல்லது சமூக ரீதியான பிரச்சினைகளைக் கூட மருத்துவ பிரச்சினையாகச் சித்தரித்துக் காட்டும் போக்கைத் தூண்டி வருகின்றது.
மருத்துவ மயமாக்கல் மீதான விமர்சனங்கள்
சமூகவியலாளர்கள் மருத்துவ மயமாக்கல் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார்கள். அவற்றில் இவான் இலீச் எனும் சமூகவியலாளர் முன்வைத்த விமர்சனங்கள் பிரதானமானதாகும். அவர் அதிகப்படியான மருத்துவ தலையீடு ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனக் குறிப்பிட்டார். அவரின் விமர்சனங்களை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.
சிக்கலான மனித அனுபவங்களை எளிமைப்படுத்துகின்றமை
மருத்துவ மயமாக்கலானது மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சமூக, உளவியல் மற்றும் மனவுணர்வு பிரச்சினைகளை வெறும் மருத்துவ ரீதியான பெயரிடலுக்குச் சுருக்கி விடுவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, சோக உணர்வு, பதற்ற உணர்வு போன்றவற்றை மனவழுத்தம் எனப் பெயரிடப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. ஆனால், அவற்றின் பின்புல காரணமாக இருக்கக் கூடிய நனவிலி, ஆழ்மன காரணிகள், தனிநபர் அனுபவங்கள், வாழ்க்கைச் சூழல் போன்ற விடயங்கள் புறக்கணிக்கப்பட்டு, வெறும் அறிகுறிகள் மட்டுமே கருத்திலெடுக்கப்டுகின்றது. இவ்வாறாகச் சிக்கலான பிரச்சினைகளை எளிமைப்படுத்தி மேலோட்டமாக அணுகுவது தொடர்பில் மருத்துவ மயமாக்கல் மீது சமூகவியலாளர்களால் விமர்சனம் முன்வைக்கப் படுகின்றது.
அதிகப்படியான சிகிச்சைகளும் மருந்துகளில் தங்கியிருத்தலும்
மருத்துவ மயமாக்கல் அன்றாட வாழ்க்கையில் அதிகப்படியான மருந்து பயன்பாட்டுக்கும், மருத்துவச் சிகிச்சைகளுக்கும் வழிவகுக்கின்றது. வாழ்க்கை முறையை மாற்றுதல், பழக்க வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளல் மூலம் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளுக்குக் கூட மருந்து உட்கொள்ளல் அல்லது அறுவை சிகிச்சைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதன் காரணமாகச் சுகாதார விடயங்களுக்கான செலவு அதிகரித்தல், பக்கவிளைவுகள் ஏற்படல், நீண்ட கால அடிப்படையில் மருந்துகளில் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படுதல் போன்ற பாதகமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.
மனிதர்கள் ஆளுமையையும் சுயாதீன தன்மையையும் இழத்தல்
மருத்துவ மயமாக்கல் காரணமாக ஒருவர் தன்னை தானே நோயாளியாகப் பார்க்க ஆரம்பிக்கும் நிலை ஏற்படுகின்றது. மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல், ஆலோசனைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதன் காரணமாக ஒருவரி தன்னம்பிக்கை சிதைந்து, சவால்களைச் சந்திக்கும் ஆற்றல் குறைந்து போகலாம். காலப்போக்கில் தமது ஆரோக்கியம் , நல்வாழ்வு தொடர்பாகச் சுயாதீனமாக முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடலாம்.
சமூக காரணிகளையும் , நிர்ணயிப்பான்களையும் புறக்கணிக்கின்றமை
வறுமை, மனஅதிர்ச்சி(வுயசரஅய), பாலின அடையாள சிக்கல் போன்றவற்றை மருத்துவ பிரச்சினைகளா அணுகுவதால், அவற்றிற்கு மூலக் காரணமாக அமையுமட சமூக, பொருளாதார பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது, அல்லது புறக்கணிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஓரங்;கட்டப்பட்ட விளிம்பு நிலை சமூகங்களில் மனிதர்கள் அனுபவிக்கும் மனவழுத்த பிரச்சினையை மருத்துவ பிரச்சினையாக அணுகும் போது, மூலக்காரணமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலிருந்து விலகிச் செல்லும் நிலையைக் குறிப்பிடலாம்.
முடிவுரை
மருத்துவ மயமாக்கல் காரணமாக ஆரோக்கியம் மற்றும் நோய் நிலை குறித்தும், நாளாந்த வாழ்க்கை குறித்தும் மக்கள் கொண்டுள்ள புரிதலையும், பார்வையையும் மாற்றமடைந்து வருகின்றது. மருத்தவமயமாக்கலானது மனிதர்கள் நோய்களால் அவதிப்படும் அவற்றைச் சரிவர இனங்கண்டு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதாக இருந்த போதிலும், மறுபுறம் சாமான்யமான வாழ்வியல் அனுபவங்களும் பிரச்சினைகளையும் கூட நோயாகக் கட்டமைத்து, அதற்கான சமூக காரணிகளை விடுத்து மருத்துவ ரீதியான சிகிச்சைகளில் தங்கியிருக்கும் ஆபத்துகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. எனவே, இலங்கை போன்ற பன்மைத்துவ கலாச்சாரம் காணப்படும் தெற்காசிய நாடுகளில், மருத்தவமயமாக்கலை விமர்சன ரீதியான கண்ணோட்டத்துடன் அணுகுதல் அவசியமாகின்றது. அதாவது, நாளாந்த வாழ்வின் மனித அனுபவங்களையும் பிரச்சினைகள் உண்மையில் மருத்துவ பிரச்சினையாக அல்லது பிற வகையான அல்லது சமூக ரீதியான பிரச்சினையா என்பதினை உயிர் மருத்துவ அறிவியலுடன், சமூக, கலாச்சார மற்றும் , மனவுணர்வு ரீதியான காரணிகளுடன் இணைந்த வகையில் ஆராய்ந்து இனங்காணல் வேண்டும்.