Post Top Ad

மனித நேயமா? மோகமா?

ஏற்றுக்கொள்ள கடினமான முறையில் ,எதிர்பாராமல் நடந்த பிலிப் ஹியுக்ஸின் மரணத்திற்காக உலகம் முழுவதிலிருந்தும், அநேகமானோர் அனுதாபத்தையும், துயரத்தையும் வெளியிட்ட வண்ணமிருக்கின்றனர். இந்த மரணத்திற்கு எந்த பகைமையோ, முன்குரோதமோ, உள்நோக்கமோ, திட்டமிடலோ, பழிவாங்கலோ, சதிசெயலோ பின்னனியாக இருக்கவில்லை. இவ்வாறு, ஒரு உயிர் ஏற்றுக்கொள்ள கடினமான முறையில் விளையாடும் போது ஏற்பட்ட ஒரு விபத்தால் பறிக்கப்பட்டமை உலகெங்கிலுமுள்ள அநேகமானவர்களின் மனதை கவலையடைய செய்தமைக்கும், இனி இப்படி ஒரு மரணம் நிகழ கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கும் உண்மையான காரணம் மனிதநேயம் தானா???? அல்லது, நியாயமற்ற முறையில் ஒரு உயிர் பறிக்கபட்டமைக்கு எதிரான எதிர்ப்புணர்வா? 

அப்படியானால், திட்டமிட்ட முறையில், சதிசெயல்களாலும், மானுட விழுமியங்களை மீறியும், பகைமையும் காழ்புணர்ச்சியையும் வெளிபடுத்தி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்ட போது இந்த மனிதநேயம் சுவிற்சலாந்திற்கு சுற்றுலா சென்றிருந்ததா??? ஒரே ஒரு ஹியுக்ஸின் கோமா மௌனம் உலகை உலுக்கும் என்றால் கொத்து கொத்தாக கொத்து குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் கதறல்கள் இவர்களுக்கு எப்படி கேட்காமல் போனது???? ஒருவேளை மனித நேயத்திற்கும் சந்தர்ப்பவாதம் தெரியுமோ????



நாடுகளின் கிரிக்கெட்டுக்கள் அதிகம் தாக்கம் ஏற்படுத்துவன ஆகும். ஹியுக்சிற்கு பின்பு இஸ்ரேலிய நாட்டு கிரிக்கெட் நடுவர் ஒருவரும் பந்து தாக்கியதால் மரணமானார். அவர் குறித்து இவ்வாறு எந்த அனுதாப அலையும் ஏற்படவில்லை. மூலதனதுவ சமூகத்தில் மனிதநேயத்தை கூட சந்தையும் அதனுடனான எமது பிணைப்பும் தான் தீர்மானிக்கிறது. அப்படி இல்லை என்றால் நம் தேசத்தில் கொத்து கொத்தாய் மனிதர்கள் கொல்லப்பட்ட போதும் இந்த அனுதாபமும் கவலையும் ஏற்பட்டிருக்கும். ஹியுக்சின் மரணம் கிரிக்கெட் உலகின் அசைவுகளை பாதித்தது போல் அன்றைய காலகட்டத்தில் எமது சமூக அசைவுகளையும் பாதித்திருக்கும். தற்போது இடதுசாரிகள் மனிதநேயம் குறித்து கருத்தரங்கு நடத்துவது போல் ( ) எல்லோருக்கும் கருத்தரங்கு நடத்தி கற்பிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

Post Top Ad

My Instagram