Post Top Ad

பெண்களின் உலகில், அரசியல் பொன்னையர்களாகும் ஆண்கள் அனைத்துலக பெண்கள் நாள் செய்தி

சிறிலங்காவில் இடதுசாரிக் கட்சிகள் உட்பட பலர் பெண்கள் தினம் தொடர்பாக அளவு கணக்கின்றி எழுதி தள்ளியிருக்கின்றார்கள். அவையனைத்தும் சிறிலங்காவில் பெண்கள் பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருப்பதாகவே கூறுகின்றன. இவ்வாறு ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வழிவகைகள் குறித்து பலர் பக்கம் பக்கமாக எழுதியிருக்கின்றார்கள்.
நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது முதலாளித்துவ சமூகத்தில் என்பதை இலகுவாக மறந்துவிடும் பலர் சம்பிரதாய முறையில் முதலாளித்துவ அமைப்புகளினால் கற்பனையாக உருவாக்கப்பட்ட நாட்காட்டி தினங்களின் சதியில் சிக்கி மார்க்சிய புரட்சிகர கோசங்களை விட்டு விலகி பெண்களின் உரிமைகளிற்காக போராட கிளம்பி விடுகின்றார்கள். இவ்வாறானவர்கள் பெண்கள் தினத்தில் பெண்னுரிமை தொடர்பாகவும்,
தந்தையர் தினத்தில் தந்தையர்களின் உரிமை தொடர்பாகவும், எயிட்ஸ் தினத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் உரிமைகள் குறித்தும், மேதினத்தில் தொழிலாளர்களின் உரிமை குறித்தும் கதைக்கின்றார்கள். இந்த புரட்சிகர இடதுசாரிகள் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தன்னையும் ஏமாற்றி, ஏனையவர்களையும் ஏமாற்றுகின்றார்கள். சிறிலங்காவில் தற்போதைய நிலையில் பெண்கள், தற்போது சந்தை காரணிகளிற்கு அமைய பரிமாற்று பண்டம் என்பதை தெரிந்திருந்தும், தெரியாதது போல் அயோக்கிய தனமாக இவர்கள் செயற்படுவது மர்மம் தான். அந்தவகையில் இவ் சம்பிரதாய புரட்சியாளர்கள் மனநோயாளர்களே ஆவார்கள். (உண்மைநிலை என்பது தனது மனதில் உருவாக்கப்பட்டதே ஒழிய நடைமுறையில் இருக்கும் உண்மைநிலை அல்ல). 


இந்த உண்மை நிலையை புலபுடுத்துவதற்காக அண்மைய உதாரணம்;, சில காலங்களுக்கு முன் மிக பிரபல்யமாகவிருந்த ஒரு பாம்பு பெண் ஆவார். அவர் குறித்து தெரியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு பிரபல்யமானவர் அவர். பாம்பொன்றை கழுத்தில் தாங்கியவாறு நீதிமன்றத்திற்கு வந்த அவர் அப்பாம்புடனே பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். சிறிலங்காவில் பெண்கள் பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருப்பதாக கூறும் பழைய பெண்ணியவாதிகளிற்கும் பழைய மார்க்சியவாதிகளிற்கும் தவறவிட்ட அல்லது கண்டுகொள்ளாத உண்மைநிலை இதுவாகும். உண்மையில் தற்போது  ஆண்கள் பெண்களின் ஆதிக்க நிலைக்குள் தான் இருக்கின்றார்கள். இவ்வாறு அரசியல் ரீதியாக ஆண்கள் பொன்னையர்கள் ஆகி இருப்பதினால் தான் கழுத்தில் பாம்புடன் பெண்களால் வலம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பு பெண் கழுத்தில் பாம்புடன் நடமாடும் போது எந்த ஒரு மிருக வதை எதிர்பாளர்களும் எதிர்த்து குரல் கொடுக்காமை தற்செயல் நிகழ்வா என தெரியவில்லை. இறுதியில் பெண்களின் முன்னால் பாம்பும் ஒடுக்கப்படும் நிலைக்கு நிலை சென்றுள்ளது.
சிறிலங்காவில் ஆணாதிக்கத்தினால் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் தொடர்பாக பழைய பெண்ணியவாதத்தின் பிரதான கருப்பொருள,; ஆண் பாலினரால் பெண்கள் வலுவற்றவர்களாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதாகும். ஆனால் தற்போது ஆண்கள் இருந்த அந்த இடத்திற்கு கையடக்க தொலைப்பேசிகள் வந்துள்ளன. இது தொடர்பாக அவதானம் செலுத்தும் பெண்ணியவாதிகள் அல்லது இடதுசாரிகள் சிறிலங்காவில் இல்லை என்பதுடன் அவ்வாறு யாரேனும் இருப்பார்களாயின் அது தொடர்பாக கலந்துரையாடலுக்கு வரவேண்டும். 
அன்றாட வாழ்வில் நாம் காணும் உண்மையாகவே பெண்கள் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறை என்ன? பெண்களினால் வர்த்தக சந்தை ஆட்கொள்ளப்பட்டிருப்பதுடன் , சந்தையினால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் பெண்களை இலக்கு வைத்தே ஆகும்.;. கார்கில்ஸ் புட்சிட்டி, கீர்ஸ் சுபர் மார்க்கட், பல்லங்காடிகள் தொடக்கம் வங்கி காப்புறுதி நிறுவனங்கள், ஓடேல், மக்டொனால்ட், கே எப் சி .... என எல்லா நிறுவனங்களிலும் பெண்களின் வகிபாகம்; தொடர்பாக சற்று சுயசிந்தனையுடன் நோக்கி ஆராய்ந்து பாருங்கள். ஆகவே பெண்கள் தினத்தில் துன்பபடும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக கதைப்பவர்கள் நிச்சியமாக சுய சிந்தனை அற்றவர்களாகவே இருக்க வேண்டும். முதலில் நாட்காட்டியிலிருந்து பெண்கள் தினம் என்பதை நீக்க வேண்டும் என்பதே எனது முன்மொழிவு. 
கடந்த 30 வருட காலம் நடந்த தமிழ் தேசிய விடுதலை போராட்டம் யுத்தம் மூலம் தோற்கடிக்கப்படும் வகையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை வளர்த்துவிட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் ஆவார்கள். குறிப்பாக முள்ளிவாய்க்காலில் பேரானந்தம் கண்டு , தமிழர்களின் இரத்தமும் சதையும் கலந்த பாற்சோற்றை சுவைபார்த்து மகிழ்ந்த போது அதிகம் பங்களிப்பு செய்தவர்கள் பெண்கள் ஆவார்கள். (இதே போல் சில மாதங்களிற்கு முன் ஹியுகோஸ் சாவேசின் மரணத்தை பிரச்சாரபடுத்தி பெரிதாக தூக்கி பிடித்தவர்கள் சாவேசை லெனினிற்கு நிகரானவராக்கினார்கள். ஆனால் தேசிய விடுதலை போராட்டத்திற்கு தலைமை வகித்த சாவேஸ் மார்க்சியவாதி இல்லை என்பதை சிறிலங்காவில் மார்க்சியவாதிகளாக வலம் வருபவர்களிற்கு தெரியவில்லை. சாவேஸ் இனவாதத்திற்கு எதிராக போராடியவர். இனவாதத்தை தோற்கடித்தவர். ஆனால் சிறிலங்காவில் சாவேஸ் குறித்து அதிகமாக கதைப்பவர்களும் அவருக்கு மரியாதை செலுத்துபவர்களும் மோசமான இனவாதிகள் ஆவார்கள்).
இன்றும் வேலைத்தளங்களில், தொழிற்சாலைகளில் கண்ணீர் சிந்தும் பெண்களிற்காக குரல் கொடுப்பவர்கள், உண்மையில் பெண்களை சந்திக்க நேருவது நவீன வியாபார சந்தையில் தான். நாம் வாழ்வது முதலாளித்துவம் எனும் மனிதர்களையும் மனிதத்தையும் படுபாதாள குழிக்குள் தள்ளிவிடும் ஆபத்தான சமூக முறை என்பதனை ஒருபோதும் ஏற்க விரும்பாதவர்களாக இருப்பதும் பெண்கள் தான். அநேக பெண்களிற்கு நடைமுறையிலிருக்கும் சமூக முறை பிரச்சினையே இல்லை. அதன் அடுத்த நகைப்பிற்குரிய நிகழ்வு என்னவெனில் முதலாளித்துவ சமூகத்தை விட உயர்ந்த சமூகத்தை உருவாக்கிட போவதாக கூறி புரட்சிகர அரசியல் செய்ய வரும் பலரை இறுதியில் சேலைமடிப்புகளில் சிதற வைத்து, வடிவேலுவின் அரசியலிற்கு தள்ளி அரசியல் பொன்னையர்களாக்கிட   பெண்களால் முடியும்.
உண்மையில் பெண்கள் தினத்தில் நாம் உண்மையில் போராட வேண்டியது பெண்களின் உரிமைக்ககாகவா? அல்லது பெண்களினால் பெரும் அழுத்தத்திற்கும் மனவிகாரத்திற்கும்  ஆளாகியிருக்கும் ஆண்களி;ன் உரிமைகளிற்காகவா?   பெண்கள் தினம், சிறுவர் தினம் என 365 நாட்களையும் ஏதோ ஒன்றிற்கான முக்கியமான நாளாக மாற்றியிருப்பது யார்?  இந்த தினங்களில் புரட்சியாளர்கள் சிக்குண்டு முன்வைக்கும் கோசங்களினால் முதலாளித்துவத்தை மாற்றிட முடியுமா? முதலாளித்துவத்தை மாற்றிடுவது இவ்வளவு இலகு என்றால் எதற்கு புரட்சிகர இயக்கம்? இதை மார்க்சியவாதிகள் புரட்சியாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களிற்கு வீட்டுபாட வேலையாக கையளிக்கின்றேன். இதை பொய் என நிருபிக்க முடியுமானால்.....

Post Top Ad

My Instagram